தமிழர்கள் பிரதமர் மோடியை பாராட்ட வேண்டும் -அமைச்சர் செல்லூர் ராஜூ
சென்னை: ஐ.நா.சபையில் தமிழின் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் பிரதமர் மோடி பேசியதற்காக அவரை தமிழர்கள் பாராட்ட வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை பொறுத்தவரை தாம் பங்கேற்கும் அதிமுக கூட்டங்களில் கலகலப்பாக பேசி அங்கிருக்கும் இறுக்கத்தை தளர்த்துவார். மேலும், செய்தியாளர்களை சந்தித்தாலும் தனது பேட்டியை தலைப்புச் செய்தியாக வரும் படி அதிரடி கருத்துக்களை கூறி அசத்துவார்.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா.சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி ''யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்ற புறநானுற்று வரிகளை மேற்கோள் காட்டி பேசியிருந்தார். இந்நிலையில், அதற்காக தமிழர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாராட்ட வேண்டும் என்றும், அது நமது கடமை எனவும் இன்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஐ.நா. சபையில் உலகத் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி தமிழை பெருமைப்படுத்தியுள்ளதாக கூறியிருக்கிறார். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேட்டி பாஜகவினரையே கூச்சமடைய வைத்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அதற்கு உதாரணமே சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீதான கைது நடவடிக்கை என்றும் கூறினார். யார் தவறு செய்தாலும் அதிமுக அரசு அதை வேடிக்கை பார்க்காது என்றும், தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications