சிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி
சென்னை: முகலிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் தெரியாமல் நிகழ்ந்துவிட்டது என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
முகலிவாக்கம், சிட்லபாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்த உயிரிழப்புகள் நடந்துள்ளது. இதுகுறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
சிட்லபாக்கம் இளைஞர் சேது மின் கம்பம் விழுந்து உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த செய்தி தவறானது. ஆனால்,இது வரை மின் கம்பம் சேதம் அடைந்ததாக புகார் வரவில்லை. அந்த வழியாக சென்ற லாரி இடித்து மின் கம்பம் விழுந்தது தான் உண்மை.

நடவடிக்கை
லாரி இடித்து மின்கம்பம் சேதம் அடைந்த ஆதாரம் என்னிடம் உள்ளது. மின்சார வாரியம் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த மின்கம்பம் பழுதடைந்ததாக எந்த புகாரும் கிடையாது. காவல் துறையினர் சிசிடிவி ஆதாரங்களை தேடி வருகிறோம்.

பள்ளம் தோண்டிய நிறுவனம்
விரைவில் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முகலிவாக்கம் விபத்து கூட எங்களுக்கு தெரியாமல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளம் தோண்டியதால் நிகழ்ந்தது. பள்ளம் தோண்டிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

பருவமழை காலம்
1912 புகார் எண்ணில் மின்துறை தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து மின் கம்பங்களும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சரி செய்யுமாறு
மின் துறை ஊழியர்கள் சேவைகளுக்கு பணம் கேட்டால் உடனடியாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தரமற்ற மின்கம்பங்கள் என்பதே கிடையாது. அனைத்து மின்கம்பங்களும் தரமாகவே உள்ளன. ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்தே மின்கம்பத்தை நடுகிறோம். சேதமடைந்த கம்பங்களை 10 நாட்களுக்குள் சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications