சிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி
சென்னை: முகலிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் தெரியாமல் நிகழ்ந்துவிட்டது என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
முகலிவாக்கம், சிட்லபாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்த உயிரிழப்புகள் நடந்துள்ளது. இதுகுறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
சிட்லபாக்கம் இளைஞர் சேது மின் கம்பம் விழுந்து உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த செய்தி தவறானது. ஆனால்,இது வரை மின் கம்பம் சேதம் அடைந்ததாக புகார் வரவில்லை. அந்த வழியாக சென்ற லாரி இடித்து மின் கம்பம் விழுந்தது தான் உண்மை.

நடவடிக்கை
லாரி இடித்து மின்கம்பம் சேதம் அடைந்த ஆதாரம் என்னிடம் உள்ளது. மின்சார வாரியம் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த மின்கம்பம் பழுதடைந்ததாக எந்த புகாரும் கிடையாது. காவல் துறையினர் சிசிடிவி ஆதாரங்களை தேடி வருகிறோம்.

பள்ளம் தோண்டிய நிறுவனம்
விரைவில் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முகலிவாக்கம் விபத்து கூட எங்களுக்கு தெரியாமல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளம் தோண்டியதால் நிகழ்ந்தது. பள்ளம் தோண்டிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

பருவமழை காலம்
1912 புகார் எண்ணில் மின்துறை தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து மின் கம்பங்களும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சரி செய்யுமாறு
மின் துறை ஊழியர்கள் சேவைகளுக்கு பணம் கேட்டால் உடனடியாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தரமற்ற மின்கம்பங்கள் என்பதே கிடையாது. அனைத்து மின்கம்பங்களும் தரமாகவே உள்ளன. ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்தே மின்கம்பத்தை நடுகிறோம். சேதமடைந்த கம்பங்களை 10 நாட்களுக்குள் சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications