ரஜினியிடம் தொலைப்பேசியில் வாழ்த்து சொன்ன முக அழகிரி.. என்ன பேசினார்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்புக்கு அவரது நெருங்கிய நண்பரான முக அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 3 வருடங்களுக்கு பிறகு அரசியல் கட்சி தொடங்கப்போவதை அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளார்.
அவர் சொன்னபடி 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். தேர்தலுக்கு நான்கு மாதங்கள் உள்ளதால் அதற்குள் அடிமட்ட நிர்வாகிகளை வரை நியமிக்க விரும்புகிறார்.

தமிழருவி மணியன்
அதற்காக இரண்டு பேரை கட்சியின் உயர்மட்ட பொறுப்பில் நியமித்துள்ளார். ஒருவர் தமிழருவி மணியன் மற்றொருவர் பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவர் அர்ஜூன் மூர்த்தி. தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும், அர்ஜூன் மூர்த்தி. தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களுக்காக உயிர்
ரஜினி அரசியல் கட்சி குறித்து பேசுகையில், என் உயிரே போனாலும் அது மக்களுக்காக போகட்டும். தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு. நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி என்று பேட்டியின் போது கூறினார்.

ஆன்மீக அரசியல்
ரஜினியின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்,. ஆன்மீக அரசியல் நிச்சயம் வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வியூகம் அமைத்து பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ரஜினிக்கு வாழ்த்து
ரஜினியின் அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் அவரது நெருங்கிய நண்பரும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமாகிய முக அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியிடம் தொலைப்பேசியில் அரசியலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த முக அழகிரி, உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

என்ன முடிவெடுப்பார்
ரஜினிகாந்தும் முக அழகிரியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இருவருமே இந்த முறை சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உண்டாக்கும் சக்திகளாக பார்க்கப்படுகிறார்கள். ரஜினி தனி கட்சி ஆரம்பித்துவிட்ட நிலையில், அழகிரியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது. தனது ஆதரவாளர்களை சந்தித்து விரைவில் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications