புயல் அடித்த பகுதிகளுக்கு போகாமல்.. ஆட்டம் பாட்டம் எதற்கு.. முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம்
முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: "புயல் அடித்த பகுதிகளை ஆய்வு செய்யாமல் இப்படி சொந்த ஊரில் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகளை ரசிப்பதற்கான நேரம் இது கிடையாது" என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புயல் அடித்து 3 நாள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு மாவட்டமும் சீர் செய்யப்படாமல் உள்ளது. மக்கள் மாவட்டங்களில் தவித்து வருகிறார்கள்.
வெறும் நிதியுதவியை அளித்துவிட்டு, இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் போய் முதல்வர் பார்க்காமல் உள்ளார். இதற்காக நிறைய கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

ஓ.எஸ். மணியன்
அதேபோல அமைச்சர்கள் மீதும் மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அவர்களை கண்டித்து சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை செய்து வருகிறார்கள். ஒருபடி மேலேபோய் தங்களை பார்க்க வந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் மீது தங்கள் கோபத்தையும் ஆதங்கத்தையும் காட்டி விட்டார்கள்.

ஸ்டாலின் பாராட்டினார்
கஜா புயல் அடித்த அன்று, அதிமுகவின் அரசின் செயல்பாட்டினை முதலில் மனமுவந்து பாராட்டியது ஸ்டாலின்தான். ஆனால் தற்போது அதே ஸ்டாலின்தான் முதலமைச்சரின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

50-பேர் பலி
அதில், "ரோம் நகரம் பற்றியெறிந்த போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததாகச் சொல்வார்கள்'. நம்முடைய இதயமில்லாத முதலமைச்சர் எட்டிப்பார்க்காத பழனிசாமிக்குள்ளும் ஒரு நீரோ இருக்கிறான்.கோரப் புயல் பாதித்து 72 மணி நேரத்தை கடந்தும், பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் முதலமைச்சர் சந்திக்கவில்லை. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
|
இது நேரமில்லை
பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை, உடைமைகளை இழந்திருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சரோ தன் சொந்த ஊரில் ஆட்டம், பாட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். கொண்டாட்டத்திற்கும், கேளிக்கைக்கும் இது நேரமில்லை என்பதை முதல்வர் உணர வேண்டும்!" என காட்டமாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications