வசந்தகுமார் விரைவில் வீடு திரும்புவார் என நம்பினேன்.. கொரோனா பிரித்துவிட்டதே.. ஸ்டாலின் உருக்கம்
சென்னை: கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன்! இன்முகம்- பழகுவதற்கு இனியர்; கடின உழைப்பாலும் சலியாத முயற்சியாலும் சாதித்துக் காட்டிய வெற்றியாளர்!
காங்கிரஸ் கட்சியினருக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபமும்! அவருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்குமான பாசப் பிணைப்பை நேரில் கண்டு வியந்திருக்கிறேன், அனைத்துக் கட்சித் தொண்டர்களின் அன்பையும் பெற்றவராகத் திகழ்ந்தார்.
கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன்!
— M.K.Stalin (@mkstalin) August 28, 2020
இன்முகம்- பழகுவதற்கு இனியர்; கடின உழைப்பாலும் சலியாத முயற்சியாலும் சாதித்துக் காட்டிய வெற்றியாளர்!
காங்கிரஸ் கட்சியினருக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபமும்! pic.twitter.com/o4E9sgQh8X
விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை பொய்த்தது. கொரோனா அநியாயமாகப் பிரித்துச் சென்றுவிட்டது. வசந்த் அண்ட் கோ என்ற நிறுவனத்தை கடின உழைப்பால் உருவாக்கி முன்னுதாரணமாக விளங்கியவர். கன்னியாகுமரி எம்பி ஆக நாங்குநேரி எம்எல்ஏவாக மக்கள் எளிதில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்.
ரஜினிகாந்த் வெளியிட்ட...எம்பி வசந்தகுமாரின்... வெற்றிப்படிக்கட்டு...புத்தகம்!!
பொது வாழ்விற்கு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த அவரின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. வசந்தகுமாரின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.