எத்தனை சோதனைகள்; அவதூறுகள்.. மக்களுக்கு நன்றி.. உங்களுக்காக உழைப்பேன்.. ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!
சென்னை: திமுகவை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.
Recommended Video
தமிழக மக்கள் நீண்ட காலம் எதிர்பார்த்து கொண்டிருந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வாழ்த்து மழை.. ஸ்டாலின் இல்லத்தில் குவியும் முக்கியப் பிரமுகர்கள். போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!
திமுக அபார வெற்றி
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரியணையில் அமர ஆயத்தமாகி விட்டது. இதுவரையிலான வாக்கு எண்ணிக்கையில் திமுக 88 இடங்களில் முன்னிலையும் 65 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. அதிமுக 58 இடங்களில் முன்னிலையும் 22 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது.
ஸ்டாலினுக்கு வாழ்த்து
தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையின் மொத்த தொகுதிகளையும் திமுக முழுவதுமாக கைப்பற்றி விட்டது. திமுகவின் வெற்றியால் அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மக்களுக்கு நன்றி
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திமுக தொண்டர்கள் யாரும் வெற்றியை கொண்டாடக் கூடாது என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் திமுகவை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் வெல்லும்
எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி! ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். உங்களுக்காக உழைப்பேன்! உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி. தமிழகம் வெல்லும்! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.