முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் - கொரோனாவில் இருந்து மீண்டார்
முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சென்னை: கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த முதல்வர் மு.க ஸ்டாலின், தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு இருந்ததன் காரணமாக அவர் கடந்த 14ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
கொரோனா அறிகுறியினால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார். ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலி அங்கேயே தங்கி ஓய்வு பெற்று வந்தார். முதல்வர் மு.க ஸ்டாலினை சந்திக்க யாருக்குமே அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.
திங்கட்கிழமையன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். ஒரு வாரம் முழ்மையான ஓய்வில் இருக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்றைய தினம் காவேரி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் மு.க ஸ்டாலின் தனது காரில் வீடு திரும்பினார். சில நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications