குறைந்தபட்ச விலை உயர்வு உட்பட.. விவசாயிகளுக்கு நாங்கள் செய்த நல்லது என்ன.. லிஸ்ட் போட்ட மத்திய அரசு
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதல் நாள் பொறுப்பேற்றது முதல், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும், முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. முந்தைய அரசாங்கங்களை விட, குறைந்தபட்ச ஆதரவு விலையை, பல மடங்கு அதிகரித்துள்ளது என்று, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 2 வாரங்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். அரசுடன் நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில்தான், மத்திய அரசு ஊடகங்களுக்கு ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

துவரம் பருப்பு
2013-14ல், துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, ரூ .4,300 / குவிண்டால் என்ற அளவுக்கு இருந்தது. 2020-21ல் குறைந்தபட்ச ஆதரவு விலை துவரம் பருப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.6,000 என்று உயர்த்தப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கு அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை 55% அதிகமானது.

அதிக பருப்பு கொள்முதல்
2009-14 ஆம் ஆண்டில், காங்கிரஸ் அரசு, 1.52 எல்எம்டி அளவுக்குத்தான் பருப்பு வகைகளை மட்டுமே வாங்கியது, அதேசமயம் 2014-19ல் குறைந்தபட்ச ஆதரவு விலையில் மோடி அரசு 112.28 எல்.எம்.டி பருப்பு வகைகளை வாங்கியது. இது 74 மடங்கு உயர்வு!

சந்தைக்கு வெளியேயும் விற்கலாம்
விவசாயிகள் சார்பு சீர்திருத்தங்களின் சமீபத்திய மாற்றமாக, விவசாயிகள் ஏபிஎம்சி மண்டிகள் மற்றும் வெளியேயும் பொருட்களை விற்க வகை செய்தது.இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு எங்கும், யாருக்கும் விற்க சுதந்திரம் அளிக்கின்றன. மேலும், இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளை ஒரு பாதுகாப்பு சட்டத்துடன் உதவி செய்கின்றன. வாங்குபவர்களுடன் கையாளும் போது கட்டமைப்பு, அவர்கள் உறுதிப்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறார்கள்.

உருளைக் கிழங்கு விவசாயம்
புதிய விவசாய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட பின்னர், விவசாய பொருட்களுக்கு விலை அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு விவசாய பகுதிகளிலிருந்து ஜூன்-ஜூலை மாதங்களில், மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் உருளைக்கிழங்கை நேரடியாக குளிர் சேமிப்பு கிடங்கிலிருந்து வாங்கினர். எனவே விவசாயிகளின் உருளைக்கிழங்கிற்கு அதிக விலை கிடைத்தது.
எனவே விவசாயிகளின் உருளைக்கிழங்கிற்கு அதிக விலை கிடைத்தது.

கடுகு விவசாயிகளுக்கு நலன்
இதேபோல், மத்திய பிரதேசத்திலிருந்தும், ராஜஸ்தானிலிருந்தும் கடுகை, எண்ணெய் ஆலைகள் வாங்கியுள்ளன. 20-30% அதிகமான விலை விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தில், பருப்பு வகைகள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மாநிலங்களில், நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டதால், விவசாயிகள் 15-25% அதிக லாபம் பெற்றுள்ளனர்.

விவசாய சந்தைப்படுத்துதல் சட்டம்
என்டிஏ அரசு தல்வாய் குழுவை அமைத்தது. 2017இன் புதிய விவசாய சந்தைப்படுத்தல் சட்டத்தை இந்த குழு பரிந்துரை செய்தது. புதிய மாதிரி வேளாண் சந்தைப்படுத்தல் சட்டம், 2017, அருணாச்சல பிரதேசம், குஜராத், அசாம், நாகாலாந்து, மேகாலயா, ஒடிசா, உத்தரகண்ட், திரிபுரா கோவா, கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 11 மாநிலங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்கள் பகுதியளவை ஏற்றுக் கொண்டன. இரண்டாவது தல்வாய் குழு 2018 இல் அமைக்கப்பட்டது.

மண்டியை மூட மாட்டோம்
இப்போதுள்ள மண்டிகள் இழுத்து மூடப்படும் என்ற செய்தி பரப்பப்படுகிறது. அது தவறு. இந்த சட்டங்கள் விவசாய மண்டிகளுக்கு எதிரானவை அல்ல. விவசாய
சந்தைகள் முன்பு போலவே செயல்படும். மண்டிகளை எங்கள் அரசு நவீனமயமாக்க தொடர்ந்து பணியாற்றியுள்ளது. விவசாய மண்டி அலுவலகங்களை மேம்படுத்துவதற்கு அவை கணினிமயமாக்கப்பட்டன. எனவே, விவசாய மண்டி மூட முயற்சி நடப்பதாக கூறுவது பொய் தகவல். இவ்வாறு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications