பாரதியார் மட்டும் வாழ்ந்திருந்தால்.. பிரதமர் மோடியை புகழ்ந்து பாடியிருப்பாராம்.. சொல்கிறார் தமிழிசை!
சென்னை: மகாகவி பாரதியார் வாழ்ந்திருந்தால், பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி புகழ்ந்து பாடல் பாடி இருப்பார் என்று தமிழக பாஜக முன்னாள் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல் 2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பின், பாரதியாருக்கு பிரம்மாண்டமாக அரசு விழா எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் பாரதியாரை நினைவு கூர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் பாரதியார் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாரதியாருக்கு வணக்கம் சொல்லும் நேரத்தில் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வந்தே மாதிரம் 150வது ஆண்டு விவாதத்தில் பாரதியார் மற்றும் வ.உ.சியை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி. இந்தியாவில் எந்த பிரதமரும் பாரதியாருக்கும், வ.உ.சி-க்கும் மரியாதை செலுத்தியதே கிடையாது.
ஒருவேளை பாரதியார் இருந்திருந்தால், பிரதமர் மோடியை வாழ்த்தி பாடி இருப்பார். ஏனென்றால் தேசியத்தையும், தெய்வீகத்தையும் முன்னிறுத்தி வருகிறார். அதேபோல் அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசிய கொடியை கூட திமுக ஏற்றியதே இல்லை. ஆனால் தேசப்பற்று பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தேச பக்தர்கள் போல் திருச்சி சிவா போன்றோர் நாடகமாடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி காசியில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்கு ஏராளமான விஷயங்களை மத்திய அரசு செய்து வருகிறது. ஆனால் திமுக இதுவரை பாரதியாருக்கு அரசு விழாவை எடுக்கவில்லை.
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற பின், பாரதியாருக்கு பிரதமர் மோடி முன்னிலையில் பிரம்மாண்ட அரசு விழா நடத்தும். அதற்கான கோரிக்கை நிச்சயம் வைக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications