"கண்ணீரில் பெண்கள்" .. திமுக தோற்க 2 விஷயங்கள்தான் காரணம்.. உறுதியாக சொன்ன மோகன் சி லாசரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு டாஸ்மாக்கும், அனைத்து அரசு அலுவலங்களிலும் தலைவிரித்தாடிய லஞ்சமும் தான் முக்கிய காரணம் லஞ்சம் வாங்கும்போது அரசு அலுவலகங்களில் எம்எல்ஏ, அமைச்சர், முதல்மைச்சர் வரை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உங்களை கைகாட்டுகிறார்கள். இதனை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்கள் என்று என்று 'இயேசு விடுவிக்கிறார்' ஊழியத்தின் மோகன் சி லாசரஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கட்சியிடம் திமுக தோல்வியை தழுவி ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்த தோல்வியில் இருந்து மீண்டும் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். தோல்விக்கான காரணம் குறித்து திமுக தொண்டர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.

mohan-c-lazarus-says-that-bribe-and-tasmac-is-the-2-major-facotors-for-dmk-election-lost

அதுமட்டுமின்றி மாவட்ட வாரியாக தோல்விக்கான காரணம் பற்றி அறிய தனிக்குழுவை அனுப்பி உள்ளார். இந்நிலையில் தான் 'இயேசு விடுவிக்கிறார்' ஊழியத்தின் மோகன் சி லாசரஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தோல்விக்கான இரண்டு காரணங்களை கூறி அதனை முக ஸ்டாலின் சரிசெய்ய தவறவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மோகன் சி லாசரஸ் கூறியுள்ளதாவது:

''தமிழகத்தின் முன்னாள் முதல்வராக செயலாற்றி, நல்ல பணியாற்றிய முக ஸ்டாலினுக்கு என்னுடைய அன்பின் வாழ்த்துகள். தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு அதற்கான காரணத்தையும், மக்களின் மனதில் இருப்பதையும் அறிந்து கொள்ள ஒரு கமிட்டியை அமைத்து மக்களிடம் அபிப்பிராயங்களை கேட்க தீர்மானித்தது ரொம்ப வரவேற்கத்தக்கது. சந்தோஷமானது. பொதுமக்களும் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறியதன் படி நான் எந்த கட்சியும் சாராதாவனாக, பொதுமக்களாக சில கருத்துகளை சொல்ல விரும்புகிறேன். என் மனதில் தோன்றியது 2 காரியங்கள். அதனை தெரியப்படுத்த விரும்புகிறேன்.

ஒன்று டாஸ்மாக் கடை. மதுபான கடைகள். அதாவது தமிழ்நாட்டில் மதுபானத்தால் ஒரு கோடியே 25 லட்சம் பேர் தினமும் குடிகாரர்களாக மாறிவிட்டார்கள் என்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவரே வேதனையாக கூறியது சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது நிறைய குற்றங்கள் பெருக காரணமாக இருப்பது மதுபான கடைகள் தான் என்று எல்லா அரசியல் விமர்சகர்களும் தெளிவாக பேசி இருப்பது உங்களுக்கும் தெரியும்.

இந்த மதுபானத்தால் நிறைய மரணங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மதுபானத்தால் தமிழ்நாட்டில் விதவைகள் பெருகி இருக்கிறார்கள். தகப்பன் இல்லாத குழந்தைகள் பெருகி இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு சொல்கிறது. குற்றங்கள் பெருகவும், விபத்துகள் அதிகரிக்கவும் இந்த மதுபானம் குடிப்பதும் தான் என்று கூறப்படுகிறது. பாலியல் குற்றங்கள் அதிகரிக்கவும் இந்த போதை தான் காரணம். கண்ணீர் விட்டு அழுகிற பெண்களை நான் ஏராளமாக பார்த்து இருக்கிறேன். இந்த மதுபானம் நிமித்தமாக குடும்பங்கள் ஏராளமாக உடைந்து பாழாகி வருகிறது.

பிள்ளைகளின் வாழ்க்கை சீரழிந்து விட்டதை நினைத்து கண்ணீர் விட்டு அழுகிறார்கள். இதை எல்லாம் மூடிவிட்டால் சரியாகிவிடுமா என்று சொன்னால்.. கொரோனா காலத்தில் மதுபானக்கடை மூடப்பட்ட பிறகு கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமானவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்துவிட்டார்கள். இப்போது குடிக்க தோன்றவில்லை என்று தான் பேட்டி கொடுத்தார்கள். ஆனால் மறுபடியும் கடைகள் திறந்த பிறகு குடிக்க தொடங்கிவிட்டார்கள். அது மூடப்பட்டால் கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமானவர்கள் மேல் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள்.
இதை உங்களிடம் யாரும் சொல்வார்களோ என்பது தெரியாது. ஆனால் நான் இந்த மக்களோடு பழகி அவர்களின் கருத்துகளை அறிந்ததால் இதயத்தின் வேதனையை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன். இதனை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம்.

2வது காரியம் என்னவென்றால் நான் அறிந்த வகையில் லஞ்சம்.. எல்லா அரசியல் அலுவலகங்களிலும் ஏழை மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கிவிட்டது. ஒரு காலத்தில் ஒரு காரியத்திற்காக அரசிடம் சென்றால் நம் பக்கம் ஒரு தவறு இருந்தால் அதனை சரிசெய்ய லஞ்சம் கேட்பார்கள். அப்போது லஞ்சம் வாங்குவோர் 10 சதவீதம் பேர் இருந்தார்கள். ஆனால் இப்போது 10 சதவீதம் பேர் தான் நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். 90 சதவீதம் பேர் லஞ்சம் கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் எல்லா ஆவணங்களையும் கொடுத்தாலும் கூட, சட்டத்தின்படி நடந்து கொண்டாலும் லஞ்சம் கேட்கும் நிலைமை வந்துவிட்டது. இதனால் அடித்தட்டு, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர்.

நான் பேசியபோது ஏன் இந்த தோல்வி வந்தது? அரசியல் மாற்றம் என்று கேட்டபோது லஞ்சம்.. லஞ்சம் தான் என்று சொன்னார்கள். நேர்மையான காரியத்துக்கு கூட லஞ்சம் வாங்குகின்றனர். இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர். எம்எல்ஏ, அமைசசர், முதல்மைச்சர் வரை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. ஆனால் உங்களை கைகாட்டுகிறார்கள். இதனை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக நான் கருதுகிறேன். இது பொதுமக்களின் அபிப்பிராயம். நான் ஏராளமான மக்களிடம் பழகுவதால் இதனை உங்களுக்கு (முக ஸ்டாலின்) தெரியப்படுத்துகிறேன்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+