“திரௌபதி II திரைப்படம்.. எதிர்ப்பு கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கு..” ஒப்புக் கொண்ட மோகன் ஜி!
சென்னை: திரௌபதி II திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்திருக்கும் நிலையில், படத்திற்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதாக, இப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி கூறியிருக்கிறார்.
திரௌபதி II படம் வெளியாவதால்.. விஜய்யின் தெறி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டிருந்தார் மோகன் ஜி. தெறி ரீ-ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அஜித்தின் மங்காத்தாவிடம் வந்து மாட்டிக்கொண்டது திரௌபதி II.

இப்படி இருக்கையில், ஓசூரில் ரசிகர்களுடன் படம் பார்த்த மோகன் ஜி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வரவேற்பு எப்படி இருக்கிறது? என்று கூறியிருந்தார். அவர் பேசியதாவது, "இது திருவண்ணாமலையை ஆண்ட 'வள்ளால' மகாராஜாவோட கதை, ஒரு சரித்திர படம். மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. முதல்ல கொஞ்சம் சரியில்ல, நானே வருத்தப்பட்டுருந்தேன். ஆனால் தற்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க நிறைய பெண்கள் தியேட்டருக்கு வராங்க. நிறைய பேர் குடும்பம், குடும்பமா வந்து பார்க்கறாங்க.
IMDb-ல் நல்ல ரேட்டிங் கிடைச்சிருக்கு. 9 சம்திங் கிடைச்சிருக்கு. புக்கிங்ஸ்லயும் 8.2 கிடைச்சிருக்கு. இதெல்லாம் ஒரு ஒரு சின்ன பட்ஜெட்ல எடுத்த ஒரு வரலாற்று படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புதான்.
படம் மக்களிடை சரியாக போய் சேர்ந்திருக்கிறது. இது படை எடுத்து வந்தவங்களை பத்தின கதை. அது மக்களிடையே சென்று சேர்ந்திருக்கு. எதிர்ப்பு குரல் சுத்தமாவே இல்லை. மக்கள் எல்லாரும் ஏத்துக்குறாங்க. படத்தை நடந்த உண்மையாக ஏத்துக்குறாங்க. அதையும் தாண்டி அவதூறு செய்பவர்கள்.. செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நிறைய உண்மைகள் தமிழ் மக்களுக்கு தெரிஞ்சிற போகுதுன்னு கொஞ்சம் எதிர்ப்பு அதிகமாதான் இருக்கு" என்று கூறியிருக்கிறார்.
மோகன் ஜி, புக்கிங் பற்றி சொன்னது உண்மைதான். Book my show-ல் இந்த திரைப்படத்திற்கு 8.3 கொடுத்திருக்கிறார்கள். ஆனால் IMDb-ல் இந்த திரைப்படத்திற்கு 5.5 ரேட்டிங்தான் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications