இரு குழந்தைகளை கொன்றுவிட்டு அபிதா தற்கொலை.. செந்தாமரையிடம் போலீஸ் விசாரணை
சென்னை : இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை. இவரது மனைவி அபிதா (27). இவர்களுக்கு மகன் லட்சுமி நாராயணன் (10), மகள் ஸ்ரீமகாலட்சுமி (7) ஆகியோர் இருந்தனர்.
இந்த நிலையில் அவரது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து அபிதா கொன்றுவிட்டார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டனர். இந்த நிலையில் 3 மரணங்கள் குறித்து செந்தாமரையிடம் ராமாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
A lady who resided near Ramapuram,Chennai murders her 2 children and also hang herself. Police investigation going on.
Story first published: Sunday, February 24, 2019, 7:56 [IST]