அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே! இன்று உலக அன்னையர் தினம்!
சென்னை: உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்பையும் அரவணைப்பையும் தரும் தாயை போற்றி பலர் வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். அன்னையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அன்னையர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலர் அன்னையிடம் ஆசி பெறுவர். எப்போதும் இது வேண்டும், அது வேண்டும் என கேட்காமல் பிறர் நலனில் அக்கறை காட்டும் அன்னைக்கு பரிசு பொருட்களையும் வாங்கிச் செல்கிறார்கள்.

அன்னையின் தியாகத்தை போற்றும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் பூக்கள், இனிப்புகள், வாழ்த்து அட்டைகளை தாய்க்கு பரிசாக கொடுக்கிறார்கள்.
இங்கிலாந்தை பொருத்தமட்டில் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனைகளை செய்கிறார்கள். ஜப்பானில் முன்னோர்களை நினைவுக் கூறும் நாளாக பார்க்கிறார்கள். மெக்சிகோவில் இசை, விருந்துடன் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
சில இடங்களில் அவரவர் வசதிக்கேற்ப தாய்க்கு பொன், பொருளை கொடுத்து அழகு பார்க்கிறார்கள். அன்னையின் அன்பு என்பதே இந்த நாளின் கருப்பொருளாகும். தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அன்னையிடம் ஆசி வாங்கி இந்த விழாவை கொண்டாடுகிறார்கள். அனைத்து அன்னைகளுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள். நீங்கள் எப்படி கொண்டாடினீர்கள் என்பதை மறக்காமல் கமெண்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications