நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை.. அன்பான சர்வாதிகார ஆட்சி டூ திருச்சி தலைநகரம்.. சீமான் அதிரடி
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை 49 பிரிவுகளில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். அந்தஅறிக்கையில் தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சி முறை கொண்டுவரப்படும்.. ரயில்வே துறையை மாநில அரசுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.. 3 மரம் நட்டு, ஒரு மரம் வெட்டு என சட்டம் கொண்டுவரப்படும்.. தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 8 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை வாங்கி பெரிய அரசியல் கட்சிகளைதிரும்பி பார்க்க வைத்தது. முன்னதாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.1% வாக்குகளைப் பெற்றிருந்த அக்கட்சி, 2021-ல் அதை 6.58%-ஆக உயர்த்தி, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறியது. அக்கட்சியின் சார்பாக 234 தொகுதிகளிலும் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் எனச் சமமாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். கடந்த 2021 தேர்தலில் அக்கட்சி 'கரும்பு விவசாயி' சின்னத்தில் போட்டியிட்டது. சுமார் 30,41,717 (30.4 லட்சம்) வாக்குகள் பெற்றது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிகளுக்குப் பிறகு, தனித்துப் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற கட்சிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

அதேநேரம் 2024 நாடாளுன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 35,60,485 (35.6 லட்சம்) வாக்குகள் பெற்றது. வாக்கு சதவீதம்: 8.19% ஆகும். இது 2019 தேர்தலில் அவர்கள் பெற்ற 3.9 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.. பல தொகுதிகளில் 3-வது மற்றும் 4-வது இடத்தைப் பிடித்தனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.58% ஆக இருந்த வாக்கு சதவீதம், 2024-ல் 8.19% ஆக உயர்ந்தது. ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருச்சி போன்ற பல தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிகளுக்குப் போட்டியாக மூன்றாவது இடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்தினர். குறிப்பாக நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் சுமார் 13.5% வாக்குகளைப் பெற்றார். இது அந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் பெற்ற அதிகபட்ச சதவீதமாகும். 'கரும்பு விவசாயி' சின்னம் கிடைக்காத நிலையிலும், கடைசி நேரத்தில் ஒதுக்கப்பட்ட 'மைக்'சின்னத்தை பிரபலப்படுத்தி அதிக வாக்குகள் பெற்றிருந்தார்கள்.
இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளிலும், காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சேர்த்து 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சீமான் முன்னதாக அறிவித்துவிட்டார். சொந்த மண்ணிலிருந்து குரல் கொடுக்க விரும்புவதாக கூறிய சீமான், வரும் சட்டபேரவைத் தேர்தலில் காரைக்குடித் தொகுதியில் போட்டியிடப்போவதாக கூறினார்.
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ், தமிழர்களுக்கான முக்கியத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்று பேசிய சீமான், தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி கொண்டுவரப்படும். வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்படும்..
தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல கோடி பனைத்திட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பனைமரம் நடப்படும். சிற்றூர்களில் பசுஞ்சோலை திட்டம் கொண்டுவரப்படும், 3 மரம் நட்டு, ஒரு மரம் வெட்டு என்ற திட்டம் கொண்டுவரப்படும்.. சிபா ஆதித்தனார் பெயரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். சென்னை மட்டுமின்றி திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரியை தலைநகரமாக்குவோம்.
திருச்சி நிர்வாக தலைநகரமாக்கப்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகர் ஆக்கப்படும். தலைமை செயலகம், சட்டமன்றம் திருச்சிக்கு மாற்றப்படும்.மொழி, கலை, பண்பாட்டு தலைநகரமாக மதுரை இருக்கும். தண்ணீர் வணிகத்திற்கு தடை விதிப்போம். அரசின் சார்பில் இலவச தூய குடிநீர் வழங்குவோம்.. பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் தனி தொகுதிகள் ஒதுக்கப்படும்" உள்பட பல்வேறு வாக்குதிகளை சீமான் வெளியிட்டுள்ளார்.
-
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ்












Click it and Unblock the Notifications