யாதும் ஊரே யாவரும் கேளிர்! விஜய் சேதுபதியை பாராட்டி ரிவ்யூ கொடுத்த நல்லகண்ணு! என்ன சொன்னார் தெரியுமா
சென்னை: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இவர் மறைந்த இயக்குநர் ஜனநாதனின் உதவி இயக்குநர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாத மேகா ஆகாஷ் நடித்துள்ளார்,

மோகன் ராஜா, மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்த நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பாராட்டியுள்ளார்.
அந்த ப்ரிவியூ விழாவில் அவர் பேசுகையில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நமது தமிழ் இலக்கியத்தில் முதல் வரி. இன்று உலகத்தில் ஐக்கிய நாடு சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுதான் போடப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழுக்குரிய பெருமையை தமிழ் இலக்கியத்திற்குரிய பெருமையை அடையாளம் காட்டியிருக்கிறது.
இந்த மகிழ்ச்சியிலேயே படத்தை பார்க்க வேண்டும் என முடிவுக்கு வந்தேன். விஜய் சேதுபதியும் படக்குழுவினரும் நல்ல முயற்சி எடுத்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள சமூகங்கள் மாறிக் கிடக்கின்றன. இன்று இலங்கையில் உள்ள பிரச்சினையை தமிழ்நாட்டில் பேசுகிறார்கள். அது போல் தமிழகத்தில் உள்ள பிரச்சினையை வெளி உலகத்தில் பேசுகிறார்கள்.
இப்படி பிரண்டு கிடக்கும் ஒரு சமூகத்தை ஒரு இசையிலோ அல்லது கருத்தாலோ ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கிய படம் என்ற முறையில் இந்த படத்தை பாராட்டுகிறேன் என பேசியிருந்தார். நில அரசியலை மையமாக வைத்து படமாக்கப்பட்டு இருக்கிறதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெகுவாக பாராட்டியிருந்தார். படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications