நமிதாவுக்கு ரெட் கார்டா?.. வெள்ளி அன்று வன்முறையில் ஈடுபட்டாரா?.. உண்மை இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டில் தாமரைச் செல்வியிடம் கோபமடைந்து அங்கிருந்த பொருட்களை வீசி ஆவேசமடைந்ததால் நமிதா மாரிமுத்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் முற்றிலும் தவறானது என்றும் அவர் வெளியேறியதற்கு தாமரை உள்பட எந்த போட்டியாளரும் காரணமில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஸ்டிராங் கன்டெஸ்டென்ட்டாக சிலரை பிரபலமானதன் அடிப்படையில் சொல்ல முடியும். இன்னும் சிலரது நடவடிக்கைகளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பார்த்து வரும்போது தெரியவரும்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட 3ஆவது நாளிலேயே மக்களிடம் அந்த அளவுக்கு பிரபலமடையாமல் இருந்த நமிதா மாரிமுத்து டைட்டில் வின்னர் என்ற அளவுக்கு பேசப்பட்டார். எல்லாவற்றிற்கும் காரணம் அந்த கதை சொல் எனும் டாஸ்க்தான்.

காரணங்கள் தெரியவில்லை

காரணங்கள் தெரியவில்லை

அவரது கதையை கேட்ட நேயர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவை கொடுத்து வந்தார்கள். இந்த நிலையில் அவர் திடீரென சில தவிர்க்க முடியாத காரணங்களால் போட்டியிலிருந்து வெளியேறியதாக பிக்பாஸ் தெரிவித்தார். இது ஏன் என இதுவரை காரணங்கள் தெரியவில்லை. நமிதாவுக்கு தாமரைச் செல்விக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் நமிதா வெளியேறிவிட்டதாக பேசப்படுகிறது.

இணையதளத்தில் வைரல்

இணையதளத்தில் வைரல்

இந்த நிலையில் அவரது வெளியேற்றம் குறித்து இணையதளத்தில் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதில் 6ஆம் நாள் காலை 4 மணிக்கு நமிதா தாமரைச் செல்வியை எழுப்பி பேசினார். அப்போது நமிதா கூறுகையில் நா உங்ககிட்ட பேசினதை யார்கிட்டயும் சொல்லிராதீங்க என்றார். அன்றைய தினம் மதியம் தாமரை இரு போட்டியாளர்களிடம் நமிதா பேசியதை தெரிவித்தாராம்.

தாமரையால் கோபம்

தாமரையால் கோபம்

இது நமிதாவுக்கு தெரியவந்ததை அடுத்து வெளியே சொல்ல வேண்டாம் என சொல்லியும் தாமரை சொல்லிவிட்டாரே என கோபம் ஏற்பட்டதாம். இதனால் அந்த கோபத்தில் அவர் என்ன செய்கிறார் என தெரியாமல் அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாகவும் நமிதாவுக்கு வெளியே நற்பெயர் இருப்பதாலும் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடாது என்பதாலும் வெள்ளிக்கிழமை நடந்தவற்றை விஜய் டிவி ஒளிபரப்பவில்லை என கூறப்படுகிறது.

யாரும் காரணமில்லை

யாரும் காரணமில்லை

இது முற்றிலும் தவறானது தகவல் மற்றும் போலியான செய்தி என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்படியே மேற்கண்டவாறு சண்டை நடந்திருந்தால் அதை ஒளிபரப்ப விஜய் டிவி ஏன் தயங்க வேண்டும். அந்த சண்டை உண்மையில் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்குமே. எனவே நமிதா வெளியேறியதற்கு யாரும் காரணமில்லை. அவராகவே தனிப்பட்ட காரணங்களால் வெளியேறிவிட்டார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் நமிதா வெளியேறியதற்கு தாமரைச் செல்விக்கோ மற்ற போட்டியாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+