Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு தேசிய விருது.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு சார்பில், நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சியில், நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதான 'நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை' மத்திய அரசு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கியுள்ளது. விருது பெற்றுள்ள எம்டிசி சென்னைக்கும், துறையை சிறப்பாக வழிநடத்தி வரும் அமைச்சர் சிவசங்கருக்கும் முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலம், குருகிராமில் மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், 'இந்திய நகா்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சி 2025' நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற பிரிவில் தேசிய விருதை செந்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது.

Chennai National award

மத்திய நகா்ப்புற வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டாா், இணை அமைச்சா் டோகன் சாஹூ ஆகியோா், நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்காிடம் வழங்கினர். சென்னை மாநகரப் போக்குவரத்து மேலாண் இயக்குநா் டி.பிரபுசங்கா் உடனிருந்தார்.

தேசிய பொது போக்குவரத்து அட்டை, மின்சார பேருந்து வசதி மலம் மாசுபாட்டை குறைத்தது, பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளுக்காக இந்த தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்த விழாவில் சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரயில் எனும் பிரிவின் கீழ், நகா்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பயணிகள் சேவை மற்றும் மனநிறைவு அளிக்கும் மெட்ரோ ரயில் பிரிவில், நகா்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழ் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில், நமது திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகளான விடியல் பயணம், சென்னை மாநகர பள்ளிகளுக்கான பிரத்யேக பேருந்து வசதி, சென்னை ஒன் செயலி, ஒருங்கிணைந்த டிக்கெட் போன்ற திட்டங்கள் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல்வரின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள எம்டிசி சென்னைக்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் அமைச்சர் சிவசங்கருக்கும் பாராட்டுகள்!

நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+