நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்.. எந்த உள்நோக்கமும் இல்லை.. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்!
சென்னை: நடிகை நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது என்றும், அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் அதிமுக எம்பி சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பெயர் முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டுவிட்டது என்றும், அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
என்டிஏ கூட்டணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈழுபட்டனர். அந்த வகையில் விழுப்புரத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவி சண்முகம் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த "உங்க கனவை சொல்லுங்க" என்ற திட்டத்தை கடுமையாக விமர்சித்தார். அதில் சிவி சண்முகம் பேசுகையில், அப்துல் கலாம் அனைவரையும் கனவு காணுங்கள் என்று கூறினார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேல் சென்று "உங்க கனவை சொல்லுங்க" என்கிறார்
ஆமா.. எனக்கு நயன்தாரா வேண்டும்.. கனவை நிறைவேற்றுவாரா?.. நயன்தாராவை கல்யாணம் பண்ணி வை என்று கேட்பான்.. செய்து வைப்பாரா? என்று பேசினார். சிவி சண்முகத்தின் இந்த பேச்சு சர்ச்சையாகியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். சிபிஎம் கட்சி சார்பாக பாலபாரதி, சிவி சண்முகம் நடிகையின் பெயரை சொல்லி இருக்க கூடாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிலையில் அதிமுக எம்பி சிவி சண்முகம் நயன்தாரா தொடர்பான பேச்சிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். முற்றிலும் தவறுதலாகவே வார்த்தை பயன்படுத்தப்பட்டது. எந்தவிதமான உள்நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஆர்ப்பாட்டத்திலேயே சிவி சண்முகம் இப்படி பேசியது பல்வேறு தரப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷாவை விஜய்யுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையான சூழலில், ஆதவ் அர்ஜுனா ரஜினி தொடர்பாக பேசி சிக்கலில் மாட்டியுள்ளார். இதையடுத்து சிவி சண்முகம் நயன்தாரா பெயரை சொல்லி சிக்கி இருக்கிறார்.
-
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications