ஒரு நியாயம் வேணாமா? நயன்தாரா கேட்ட சம்பளத்தால் மயக்கம் போட்ட புரொடியூசர்.. இந்த நடிகருக்கு ஜோடியா?
சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் மூத்த நடிகர் ஒருவருடன் நடிப்பதற்கு அவர் கேட்ட சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர் தரப்பே மயக்கம் போட்டு விழாத குறைதானாம். தற்போது அவரது சம்பளத்தை குறைக்க வேண்டுமென பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் நயன்தாராவை தான் ஹீரோயினாக போட வேண்டும் என்பதிலும் படக்குழு உறுதியாக இருக்கிறதாம்.
தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, உள்ளிட்ட படங்களில் ஹீரோயின் ஆகி இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. தமிழில் விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், சிம்பு, அஜித், ஜெயம் ரவி என சீனியர் ஜூனியர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானார்.
பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகரான தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்திருந்த நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருமே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதனால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த 2022 ஜூன் மாதம் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், முக்கிய நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சொல்லப்போனால் தமிழகம் முழுவதுமே நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த பேச்சுகள் தான் எங்கு பார்த்தாலும் நிறைந்திருந்தது. அதே நேரத்தில் அப்போதிலிருந்தே சில சர்ச்சைகளும் நயன் - விக்கி தம்பதியை சுற்றிச் சுழன்றாலும் அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் உலக டூர் சென்ற தம்பதி பின்னர் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் உள்ளது இந்த ஜோடி.
இதற்கிடையே சினிமாவிலும் தனது கவனத்தை செலுத்தினார் நயன்தாரா. அவரை முன்னிலைப்படுத்தி வெளியான திரைப்படங்கள் மண்ணைக் கவ்விய நிலையில் மீண்டும் பிரபல ஹீரோக்களுக்கு தூது விட்டார். அந்த வகையில் அட்லியின் தயவால் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் சீனியர் நடிகர்கள் தங்கள் படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என கேட்டு வருகின்றார்.
அப்படி கேட்டவர் தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தின் இயக்குனரான அணில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவியின் 157 வது படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சுஷ்மிதா கனிபேலாவின் கோல்ட் பாக்ஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனமும் ஷைன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் முதற்கட்ட வேலைகள் முடிவடைந்திருக்கும் நிலையில் விரைவில் இந்த குழு சூட்டிங் புறப்பட உள்ளது.
இந்த நிலையில் தான் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தற்போது தான் பான் இந்தியா நடிகையாக வளர்ந்து விட்ட நிலையில் 18 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என நயன்தாரா கேட்டாராம். சிரஞ்சீவிக்கு கூட அவ்வளவு சம்பளம் இருக்குமா என தெரியவில்லை, நயன்தாரா இவ்வளவு கேட்கிறாரே என படக்குழு மயக்கம் போடாத குறைதானாம். இந்த நிலையில் சிரஞ்சீவி அந்தப் படத்திற்கு நயன்தாரா தான் சரியாக இருப்பார் எனக் கூற தற்போது பட குழு அவரிடம் சம்பளத்தை குறைக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே காட் பாதர், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம்












Click it and Unblock the Notifications