மாமியார், மாமனாரை கவனிக்காத கமீலா நாசருக்கு ஓட்டு போடனுமா?.. யோசியுங்கள்.. நாசர் தம்பி பரபர வீடியோ!
Recommended Video

சென்னை: மாமியார், மாமனாரை கவனிக்காத கமீலா நாசருக்கு நீங்கள் வோட்டு போட வேண்டுமா என்பதை யோசியுங்கள் என நாசரின் தம்பி பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மத்திய சென்னையில் கமீலா நாசர் போட்டியிடுகிறார். திமுகவின் தயாநிதிமாறன், பாமகவின் சாம்பால் ஆகியோருக்கு மத்தியில் கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார் கமீலா நாசர்.
இந்த நிலையில் கமீலா நாசரின் மைத்துனர் ஜவகர் ஒரு பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் நடிகர் நாசரின் தம்பி ஜவகர். அவர் மிகப் பெரிய நடிகர்.

அறிமுகம் இல்லை
அவர் நல்ல நிலையில் இருக்கும் போது கூட தனது அம்மா, அப்பாவை அவர் கவனித்ததே இல்லை. ஒரு 25 ஆண்டுகளாக தனது அம்மா, அப்பா உயிரோடு இருக்கிறார்களா, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையா என இதுவரை எட்டி பார்த்தது கூட கிடையாது. நாசர் தனது பிள்ளைகளை கூட எங்களுக்கு அறிமுகப்படுத்தியது கிடையாது. அவர் நல்ல நிலையில் இருக்கும் போது கூட தனது அம்மா, அப்பாவை அவர் கவனித்ததே இல்லை. ஒரு 25 ஆண்டுகளாக தனது அம்மா, அப்பா உயிரோடு இருக்கிறார்களா, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையா என இதுவரை எட்டி பார்த்தது கூட கிடையாது. நாசர் தனது பிள்ளைகளை கூட எங்களுக்கு அறிமுகப்படுத்தியது கிடையாது.

அறிவாளியா பேசும் நாசர்
இந்த 25 ஆண்டுகளில் அவர்கள் 2 அல்லது 3 தடவை மட்டுமே தாத்தா, பாட்டியை காண வந்திருப்பர். அதன்பின்னர் இதுவரை அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பது கூட எங்களுக்கு தெரியாது. மேடையில் பேசும் போது மட்டும் ஊருக்கு உபதேசம் சொல்கிறார், நன்றாக பேசுகிறார். இத்தனை அறிவாளியாக பேசும் நாசர் ஏன் இதுவரை அவரது தாய், தந்தையை கவனிக்கவில்லை?

பிரச்சினை
இந்த பிரச்சினையை பற்றி பேசிய போது எனக்கும் அண்ணன் நாசருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இந்த பிரச்சினையை நடிகர் சங்கத்துக்கு கொண்டு சென்றேன். அங்கிருந்த பொறுப்பாளர்கள் நாசர் நல்லவர், வல்லவர் என கூறி எனது பிரச்சினையை கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

உதவி
இதனால் மனஉளைச்சல் அடைந்த நான் இதை யாரிடம் சொல்வது என தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். அப்போதுதான் எனது அண்ணி கமீலா மத்திய சென்னையில் கமல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள் என்பது எனக்கு தெரியவந்தது. மாமனார், மாமியார், மனவளர்ச்சிக் குன்றிய ஒரு மகனுக்கு உதவி செய்யாதவர் எப்படி நாட்டு மக்களுக்கு உதவி செய்வார்கள் என்பது என்னுடைய கேள்வி.

செய்தியாளர்களை சந்திப்பேன்
எனவே ஓட்டு போடுவது அனைவரது உரிமை. ஆனால் அந்த வோட்டுக்களை கமீலா நாசருக்கு போட வேண்டுமா என்பதை மத்திய சென்னை தொகுதிக்குள்பட்ட வாக்காளர்கள் ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும். இது சும்மா சாம்பிள்தான். விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன் என்றார் ஜவகர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications