ஆக்சிஜன் தேவையா உடனே 104க்கு கூப்பிடுங்கள் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: தமிழக மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஆக்சிஜன் தேவைப்படுவோர் உடனடியாக 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னையில்கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று 3 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று உறுதியானது. அத்துடன் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 37 பேர் உயிரிழந்தனர்.குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

இதுவரை 1,618 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நிலையில் ஆயிரத்து 104 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 551 நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடனும், 93 பேருக்கு தீவிர ஆக்சிஜன் , 72 பேர் அதிதீவிர ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா அறிகுறி இல்லாமலோ, லேசான காய்ச்சல் உள்ளவர்களோ தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு வரலாம் என்றும் இல்லை என்றால் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் நாளொன்றுக்கு தமிழ்நாட்டில் 400 டன் மற்றும் புதுச்சேரியில் 150 டன் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 1,167 டன் இருப்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தற்போதைய தேவை என்பது 250 டன் ஆக மட்டுமே உள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில் ஆக்சிஜன் தேவைப்படுவோர் உடனடியாக 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி உடனுக்குடன் ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications