NEET EXAM: ‛நீட்’ தேதி அறிவிப்பு.. மே 3ம் தேதி தேர்வு நடைபெறும்.. இன்று முதல் மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‛நீட்' தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 3ம் தேதி ‛நீட்' தேர்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடக்கும். இந்த தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8 ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

நம் நாட்டில் மருத்துவ படிப்புகளை படிக்க ‛நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நம் நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பிற இளநிலை மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நீட் தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 3ல் தேர்வு
அதன்படி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு 3 மணிநேரம் நடக்கும். அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5 மணி வரை நடக்கும்.
13 மொழிகளில் தேர்வு
இந்த தேர்வுகள் தமிழ் உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெற உள்ளது. அதன்படி அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்க மார்ச் 8 கடைசி
நீட் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8 ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். மாணவ- மாணவிகள் https://neet.nta.nic.in இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.,7000, பொது - இடபிள்யூஎஸ்/ஓபிசி -என்சிஎல் பிரிவிருக்கு ரூ.1,600, எஸ்சி, எஸ்டி, பிடபிள்பிடி, 3ம் பாலினத்தவர்களுக்கு கட்டணமாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் தேர்வு எழுதும் அனைவருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.9,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மே 3ம் தேதி நீட் இளநிலை படிப்புகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications