அமைச்சர் மஸ்தான் ‘சூப்பர்’ அறிவிப்பு! 6 - 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று மாலை சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாவதம் நடைபெற்றது. அப்போது சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 அறிவிப்புகளை வெளியிட்டார் துறை அமைச்சர் மஸ்தான்.

New announcement by minister Masthan : Scholarship for minority students

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், சென்னை மற்றும் கோவையில் ரூ.81.68 லட்சம் செலவில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர்கள் விடுதி துவங்கப்படும் என அறிவித்தார். சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தைக் கொண்டாட வழங்கும் தொகையை ரூ.2000ல் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

உலமாக்கள், பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+