வங்க கடலில் புதிய புயல்.. செம ஸ்பீடில் சூறாவளி காற்று வீசக்கூடும்.. வார்னிங் தந்த வானிலை மையம்
வங்ககடலில் புயல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வருகிற 22-ம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம், வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 18, 19-ம் தேதிகளில், அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் நேற்றைய தினம், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.

ஆய்வு மையம்
இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற போவதாகவும், அது வரும் 23ம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மரை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்திருக்கிறது.. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது: "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகும்.

வலுப்பெறும்
சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலவுகிறது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 19ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மற்றும் அதன் பின் வடக்கு வடமேற்கு திசையில் அந்தமான் கடல் ஓரம் வழியே நகர்ந்து 20ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பின்னர் புயலாக வலுப்பெற்று 23ம் தேதி வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவும்.

புயல்காற்று வீசும்
இதன் காரணமாக தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இன்றும் தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதி மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளையும் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதி கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 19ம் தேதியும், தெற்கு அந்தமான் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் பகுதிகளில் வரும் 20ம் தேதியும் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications