Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று காலை முதலே பல்வேறு சிலிண்டர் ஏஜென்சிகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) சிலிண்டர் விநியோகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

சென்னையில் இன்று பல்வேறு கேஸ் ஏஜென்சிகள் சிலிண்டர் புக்கிங் இருக்கு பல்வேறு கட்டுப்பாடு விதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீர் காசியாவில் போர் பதற்றம் காரணமாக சிலிண்டர் வாங்குவதற்கு 25 நாட்கள் என்று கட்டுப்பாடுகளை மாற்றி அமைத்து உள்ளன.

LPG Cylinder Booking Rules

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் விடுத்துள்ள புதிய அறிவிப்பின்படி:

  • ஒரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தது 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • சில குறிப்பிட்ட மாநிலங்களில் இந்த கால அளவு 25 நாட்களாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் தேவையின்றி சிலிண்டர்களைக் குவித்து வைப்பதைத் (பீதி காரணமாக முன்பதிவு செய்தல்) தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னணி மற்றும் காரணங்கள்

ஈரான் - இஸ்ரேல் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் எரிவாயு தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படலாம் எனப் பரவிய தகவலால், கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு சிலிண்டர்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் விநியோகச் சங்கிலியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 7 முதல் சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த முறையற்ற முன்பதிவைத் தடுத்து, தகுதியுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவே இந்த 25 நாட்கள் விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்

"நாட்டில் தற்போது போதிய அளவு எரிவாயு இருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் சிலிண்டர்களைச் சேமித்து வைக்க வேண்டாம். இந்த 25 நாட்கள் கட்டுப்பாடு என்பது தற்காலிகமானது மட்டுமே," என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அறிய வேண்டிய விஷயம்

உங்கள் சிலிண்டர் முன்பதிவு நிலை மற்றும் விநியோக விபரங்களை அறிய உங்கள் எரிவாயு முகமையின் அதிகாரப்பூர்வ செயலியைச் சரி பாருங்கள்.‌ ஒரே நேரத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தியை மனதில் வைத்து பல்வேறு மக்கள் அதிகப்படியான புக்கிங் செய்வதை தடுக்கவே அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. ஏனெனில் ஒரே நேரத்தில் பலரும் போட்டி போட்டு புக்கிங் செய்தால் சிலிண்டர் விநியோகத்தை முறைப்படுத்தி கொடுக்க முடியாது.

பெட்ரோல் வதந்தி

அண்மையில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று வதந்தி பரவிதால் பலரும் போட்டி போட்டு பெட்ரோல் டீசல் வாங்க வந்ததும் அரசின் கவனத்திற்கு சென்றது. அதை ஓரளவு சமாளித்த அரசு, கேஸ் தட்டுப்பாடு விஷயத்தில் கட்டுப்பாடுகளை விதித்து தற்போது இந்த முடிவினை எடுத்துள்ளது. பொதுவாக மக்கள் வீதியில் செய்யும் செயல்களே விலை உயர்வுக்கு காரணமாக அமைகின்றன. அப்படியான நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+