குடும்ப அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. இனி "இவங்களுக்கும்" ரேஷன் கார்டு இருக்கு.. தமிழக அரசு அதிரடி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டுவரும் தமிழக அரசு, இப்போதும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
கொரோனா தொற்று காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் அளவுக்கு அதிகமான இன்னல்களுக்கு ஆளானார்கள்.. இதையடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், அவர்களை பாதுகாக்கவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
அதேபோல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் சுப்ரீம்கோர்ட் வரை விவகாரம் சென்றது.. கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம்கோர்ட் சில முக்கிய உத்தரவுகளை வெளியிட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட்: அந்த உத்தரவில், "இ-ஷ்ரம் இணையத்தில் பதிவு செய்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். விடுபட்டவர்களுக்கு அடுத்த 3 மாதங்களில் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசஅரசுகள் ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உத்தரவிட வேண்டும்.
ரேஷன் அட்டை மூலம் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து சலுகைகளும் புலம்பெயர் தொழிலாளர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட பலன்களும் அவர்களை சென்றடைய வேண்டும்" என்று உத்தரவிட்டது.
ரேஷன் அட்டைகள்: இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளருக்கு ரேஷன் கார்டுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. அசாம், பீஹார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வந்தவண்ணம் உள்ளனர்..
தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.. இவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டு வழங்க, புலம்பெயர் தொழிலாளரிடம் விண்ணப்பம் பெறலாம்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கலாம்: இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்லும்போது, இ - ஷ்ரம் வெப்சைட்டில், தொழிலாளர் பெயர், தொழில், முகவரி, கல்வித்தகுதி, திறன் போன்ற விவரங்கள் ஆதாருடன் இணைக்கப்படுகின்றன. இ-ஷ்ரம் வெப்சைட்டில் பதிவு செய்த, தகுதியான புலம்பெயர் தொழிலாளருக்கு க்கு, ரேஷன் கார்டு வழங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
இதில், பணி நிமித்தமாக நிரந்தரமாக தமிழகத்தில் குடியேறியவர்கள் மற்றும் தற்காலிகமாக குடிபெயர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை, குடும்பம் சொந்த மாநிலத்திலிருக்கும்போது, தொழிலாளர் மட்டும் தமிழகத்தில் இருந்தாலும், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நெகிழும் தொழிலாளர்கள்: அந்த விண்ணப்பம், சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்பி சரிபார்த்து பரிசீலிக்கப்படும்... குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினர், வெளிமாநில மக்களின் விண்ணப்பங்களை ஏற்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது" என்றனர். தமிழக அரசின் இந்த உத்தரவானது, புலம்பெயர் தொழிலாளர்களின் வயிற்றில் பாலை வார்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications