இதைவிட சூப்பர் முடிவு இருக்காது.. வீடு, ஆபிஸ் கட்டுறீங்களா? தமிழ்நாட்டில் மாறிய மிகப்பெரிய விதிமுறை
சென்னை: தமிழ்நாட்டில் வீடு மற்றும் அலுவலகம் கட்டுபவர்களுக்கான விதிகளை மாற்றி தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் பல கட்டிட விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
அதன்படி கட்டிடங்களை கட்டுவதற்காக.. 15 முதல் 30 நாட்களுக்குள் தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) வழங்க 11 துறைகளுக்கு காலக்கெடுவை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. அதாவது எல்லா என்ஓசிகளையும் 30 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

இதில் ஒரு துறை காலக்கெடுவைத் தவறவிட்டால், NOC தானாகவே வழங்கப்படும். காலக்கெடுவுக்குள் கொடுக்கவில்லை என்றால்.. என்ஓசி 30 நாள் முடிந்ததும் வழங்கப்படும். மே 2022 இல் பதிவுகளை செய்ய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியதில் இருந்து, CMDA இப்போது சராசரியாக 70 திட்டங்களை மாதாந்திரமாக அங்கீகரிக்கிறது. இந்த புதிய செயல்முறை, டெவலப்பர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. வீட்டுவசதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் திட்டங்களை அதிகரிக்கும் வகையில், மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த புதிய ரூல் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மாநில அரசு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019 இல் திருத்தம் செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் எட்டு குடியிருப்பு அலகுகளைக் கொண்ட கட்டிடங்களுக்கு நிறைவுச் சான்றிதழ் தேவையில்லை என்று கூறும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதோடு 3500 சதுர அடிக்கு கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு, கட்டிடங்களுக்கு அனுமதி தேவையில்லை. முன் அனுமதி பெற்று இதில் கட்டிடம் கட்டம் தேவையில்லை என்று தமிழ்நாடு தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்டில்ட் + 3 தளங்களின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட உயரத்தை 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராகவும், ஸ்டில்ட் + 2 தளங்களை 9 மீட்டரிலிருந்து 10 மீட்டராகவும் உயர்த்தியுள்ளது.
புதிய சட்டம்: தமிழ்நாட்டில் குடியிருப்பு கட்டுமானம் தொடர்பான விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையானது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் செய்து, உயரம் இல்லாத கட்டிடங்களின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரத்தை 14 மீட்டராக உயர்த்தி, எட்டு குடியிருப்பு அலகுகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு மிகாமல் உள்ள கட்டிடங்களுக்கு விலக்கு அளித்துள்ளது.
இதற்கு நிறைவு சான்றிதழ் அவசியம் இல்லை என்றும் அறிக்கையில் கூறி உள்ளனர். சட்ட திருத்தத்தின்படி, உயரம் இல்லாத கட்டிடங்களின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரம் 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மூன்று குடியிருப்பு அலகுகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு மிகாமல் உள்ள கட்டிடங்களுக்கு, சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை ஆணையத்தின் நிறைவுச் சான்றிதழ்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் அளவு மாறாமல் இருந்தாலும், குடியிருப்பு அலகுகள் மூன்றில் இருந்து எட்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பயனாளிகள் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை நிறைவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்காமல் எளிதாகப் பெறவும் இந்தத் திருத்தங்கள் உதவும். முன்னதாக, 12 மீ உயரம் வரையிலான கட்டிடம் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள மூன்று குடியிருப்புகள், புதிய மின் இணைப்பு பெறுவதற்கான நிறைவுச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
சாலைகள்; அதேபோல் தமிழ்நாடு முழுக்க லேஅவுட்களுக்கான குறைந்தபட்ச சாலை அகல விதிமுறையை தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்பட்ட நகரம் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் அங்கீகரிக்கப்படாத லேஅவுட்களில் உள்ள மனைகளை விரைவாக திட்ட அனுமதி பெற வசதியாக லேஅவுட்களுக்கான குறைந்தபட்ச சாலை அகல விதிமுறையை தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் கொண்டு, லேஅவுட்களுக்கான குறைந்தபட்ச சாலை அகல விதிமுறை நகரங்களில் 7 மீட்டரில் இருந்து 6.5 மீட்டராகவும், கிராம பஞ்சாயத்துகளில் 6 மீட்டராகவும் குறைக்கப்படும் என வீட்டுவசதித்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரப் பகுதி, பேரூராட்சி கிராமப் பஞ்சாயத்துகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றில் குடியிருப்பு தளவமைப்புகளுக்கான அகலத் தேவை ஏழு மீட்டராகத் தொடரும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க இப்போதுவரை மொத்தம் 27,690 அங்கீகரிக்கப்படாத லேஅவுட்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த லேஅவுட்களில் பல ஏழு மீட்டருக்கும் குறைவான சாலை அகலத்தைக் கொண்டுள்ளன. இதுபோன்ற முறைப்படுத்தப்பட்ட லேஅவுட்களில் உள்ள சாலைகள், அவற்றின் அருகே புதிதாக அமைக்கப்பட்ட லேஅவுட்களுக்கான அணுகுச் சாலைகளாகச் செயல்படுவதால், புதிதாக அமைக்கப்பட்ட இந்த லேஅவுட்களுக்கான திட்டமிடல் அனுமதியும் தாமதமானது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications