உற்சாக மிகுதி.. சர்ரு புர்ருன்ணு அதிவேகத்தில் அலப்பறை.. 100 பைக்குகள் பறித்தது சென்னை போலீஸ்
சென்னை: புத்தாண்டு பண்டிகையை மது உற்சாகத்தில் கொண்டாடிய பல இளைஞர்கள், சர்ரு புர்ருன்ணு அதிவேகத்தில் அலப்பறை செய்த காரணத்தால் அவர்களின் வாகனத்தை பறித்து கொண்டு அனுப்பி வைத்தது சென்னை போலீஸ்.
ஆம், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் அதிவேகமாக சென்றதாக, 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் நேற்று இரவு (இன்று அதிகாலை) பறிமுதல் செய்தனர்.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பலத்த போலீஸ் கண்காணிப்பையும் மீறி தண்ணி அடித்துவிட்டு அதிக வேகத்தில் பைக் ரேஸ் செய்வதை பல இளைஞர்கள் வாடிக்கையாகவே வைத்திருந்தார்கள். இதனால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாக இருந்தது.

எனவே இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பலத்த கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை சென்னை போலீஸ் செய்திருந்தது. சென்னை முழுவதும் எல்.இ.டி (LED) விளக்குகள் பொருத்திய பேரிகார்டுகளை அமைத்து வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது உற்சாக மிகுதியில் அதிவேகமாக சென்றதாக 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தி வாகனங்களை பறித்தனர்.

மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்களைக் கொண்ட வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்த போலீசார் அவர்களை பிடித்து விசரணை நடத்தினர். இதனால் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் இந்த ஆண்டு பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லாமல் அமைதியாக முடிந்தது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications