திருக்குறளை இனத்தின் அடையாளமாக நிலைநிறுத்த வேண்டும் - வைரமுத்து
சென்னை: மதுரையில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை கையொப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், திருக்குறளை எந்த அரசும் அரசனும் சட்டமாக்கவில்லை. இனிவரும் தலைமுறையேனும் திருக்குறளுக்கு உரிய பெருமையை வழங்கி இனத்தின் அடையாளமாய் நிலைநிறுத்த வேண்டும் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் கவிஞர் வைரமுத்துவின் 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் கையொப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நூல்களைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

மதுரையில் நேற்று
'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை'
கையொப்பத் திருவிழா
நிகழ்ந்தேறியது
ஆயிரம் பேர்
வரிசையில் நின்று
நூல் பெற்றார்கள்;
அனைத்து நூல்களிலும்
கையொப்பமிட்டேன்
பெரியோர் முதல்
இளையோர் வரை
என் சமகாலச் சமுதாயம்
வள்ளுவர் மறை
வைரமுத்து உரையை
வரவேற்று மகிழ்கிறது
உயர் நீதிமன்ற நீதிபதி
விக்டோரியா கௌரி,
இஸ்ரோ விஞ்ஞானி
வேலாயுதம் பிள்ளை
இருவருக்கும் நூல் கொடுத்தேன்
"திருக்குறள்
ஓர் அனாதை அறிவு
பைபிளின் பழைய ஏற்பாடு
யூதர்களின் சட்டமானது.
கன்பூசியஸின் அறக்கருத்துக்கள்
சீனாவின் சட்டங்களாயின.
மனுதர்மத்தின் கூறுகள்
இந்தியச் சட்டங்களாயின.
குர்ஆனின் திருவாசகங்கள்
இஸ்லாமியச் சட்டங்களாயின
ஆனால் திருக்குறளை
எந்த அரசும் அரசனும்
சட்டமாக்கவில்லை
இனிவரும் தலைமுறையேனும்
திருக்குறளுக்கு
உரிய பெருமையை வழங்கி
இனத்தின் அடையாளமாய்
நிலைநிறுத்த வேண்டும்"
என்றேன்". என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications