தெரிஞ்சுடுச்சு.. தெரிஞ்சுடுச்சு.. மத்தியில் யார் ஆட்சின்னு தெரிஞ்சுடுச்சு.. ப.சிதம்பரம் கணிப்பு!
Recommended Video
சென்னை: மத்தியில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் ஆட்சி அமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது. பாஜக அல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கும்.
After 6 phases of polling, it is absolutely clear that the next government will be formed by non-BJP parties including the Congress.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 16, 2019
தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என்று பாஜக கூறி வருகிறது.
Who whistles in the dark?
— P. Chidambaram (@PChidambaram_IN) May 16, 2019
Only those who are in fear. Fearing defeat, the BJP is making wild claims of winning 300+ seats.
பிராந்திய அடையாளங்கள், வரலாற்று கலாச்சாரத்தை இழிவுப்படுத்தி வரும் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் டிவிட்டியுள்ளார்.
The BJP is proving time and again that it has contempt for regional identities, history, culture and aspirations.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 16, 2019
People will give a fitting answer.