சென்னை மண்டலத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோத மது விற்பனை.. ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
சென்னை: சென்னை மண்டலத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க, ஆய்வு நடவடிக்கையை தீவிரப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் விற்பனை நேரத்தை குறைத்து அரசு உத்தரவிட்டது. இதன்படி பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.

ஆனால் சில மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் பார்கள் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோத மதுவிற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைநகர் சென்னை மண்டலத்தில் இரவு நேர சட்டவிரோத மதுவிற்பனை நடப்பதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன. மூலக்கடை, எண்ணூர், ரெட்டேரி, அம்பத்தூர், ஐயப்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுதும் சட்டவிரோத மதுவிற்பனை நடப்பதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன
காலை 6 மணி முதல் தங்கு தடையின்றி சரக்கு கிடைப்பதாகவும் இரவு எந்நேரமானாலும் மதுவிற்பனை சட்டவிரோதமாக நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, சென்னை மண்டலத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட மேலாளர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரை காட்டிலும் புறநகர் பகுதிகளில் தான் இரவு முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை அதிகம் நடைபெறுகிறது.
எனவே நிர்வாகத்தின் உத்தரவுப்படி ஆய்வில் ஈடுபட உள்ள அதிகாரிகள் விரைவில் அறிக்கை தயார் செய்வார்கள். அதிகாரிகளின் அறிக்கையின்படி சட்டவிரோத மது விற்பனையை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications