அருப்புக்கோட்டை அல்ல.. கிழக்கு தாம்பரம்.. நிர்மலா தேவி வாழ்க்கை திசை மாறியது இங்குதான்!
Recommended Video

சென்னை: கணவரின் கள்ளக்காதலால் கிழக்கு தாம்பரத்தில் நிர்மலா தேவி யின் வாழ்க்கை திசை மாறியது.
அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி (46), கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவர் சிபிசிஐடி போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கணவரின் கள்ளக்காதலால் அவரது வாழ்க்கை எப்படி திசை மாறியது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
[10 பேருடன் சரமாரி தொடர்புகள்.. இடையே வெளியூர் டூர் வேறு.. அதிர வைக்கும் நிர்மலா தேவி வாக்குமூலம்]

குடும்பம்
நிர்மலா தேவிக்கும் அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியனுக்கும் 1996-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 2003-ஆம் ஆண்டு சரவண பாண்டியன் சென்னையில் பணிபுரிந்த போது கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

சமாதானம்
அப்போது பக்கத்து வீட்டு பெண்ணுடன் சரவண பாண்டியனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் நிர்மலாவுக்கு தெரியவரவே அவர் தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இதையடுத்து சமாதானம் என்ற பெயரில் உறவினர் ஒருவர் வந்துள்ளார்.

10 பேருடன் தொடர்பு
அவருடன் நிர்மலா தேவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதன் பிறகு கணவருக்கு தொழிலில் நஷ்டம், நிர்மலா தேவியின் வேலை என பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு 10 பேருடன் தொடர்பு ஏற்பட்டதாக அவராகவே வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மறுக்க முடியாது
கணவரின் கள்ளக்காதலுக்காக தற்கொலைக்கு முயன்ற நிர்மலா தேவி இது போல் பாதை மாறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரங்கள் அனைத்தும் கணவருக்கும் தெரியும் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். தனது சுயநலத்துக்காக நிர்மலா தேவி பாதை மாறியதை கணவர் தடுக்கவே இல்லை என்பது நன்றாக தெரிகிறது. நிர்மலா தேவியின் கள்ளத்தொடர்புகள் அனைத்தும் கணவருக்கு தெரிந்திருந்தும் அவரை
தடுக்காமல் விட்டதும் அவர் கால் போன போக்கில் சென்றதற்கு ஒரு காரணமாகிவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.

நிதர்சனம்
கணவர் செய்தார் என்பதற்காக அதே தவறை நிர்மலா தேவியும் செய்தார் என்பதை நியாயப்படுத்த முடியாது. ஆனால் கணவரின் கள்ளக்காதல் வாழ்க்கைதான் அவர் வாழ்வில் இத்தனை புயல்கள் வீச காரணமாகிவிட்டன என்பது மட்டும் நிதர்சனம். மொத்தத்தில் நிர்மலா தேவியும், சரவணபாண்டியனும் ஜாடிக்கேற்ற மூடிகள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications