மாநிலத்திலேயே ஒரே ஆள்..பிளஸ் 2 தேர்வில் வெற்றி! தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த திருநங்கை நிவேதா!
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிய ஒரே திருநங்கையான நிவேதா வெற்றி பெற்று இருக்கிறார். நீட் தேர்வை எழுதி இருக்கும் நிலையில் மருத்துவராவது தனது கனவு என்கிறார் அவர்..
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தின் கீழ் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மாணவர்களை விட மாணவியர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

மார்ச் ஒன்றாம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
4,08,440 மாணவிகளும், மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும் அடங்குவர். ஒரு மூன்றாம் மாநில பாலினத்தவர் தேர்வு எழுதி, அவர் வெற்றியும் பெற்று இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் லேடி வெலிங்டன் அரசு மாதிரி பள்ளியில் படித்த நிவேதா தான் அவர். இவர் பல்வேறு சிக்கல்கள் தடைகளை தாண்டி பிளஸ் 2 தேர்வு எழுதி 280 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளார்.
தேர்வில் வெற்றி பெற்றது குறித்து பேசிய திருநங்கை நிவேதா பல்வேறு சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்தே தான் தேர்வு எழுதியதாகவும், இரு திருநங்கைகள் தனக்கு கல்வி அதிகாரிகளிடம் பேசி, தலைமையாசிரியர் சீட்டு வழங்கியதாகவும், 3 ஆண்டுகளாக தான் இந்த பள்ளியில் படிப்பதாக கூறினார். நேற்று நடந்த நீட் தேர்வை எழுதியுள்ள நிலையில், தான் வெற்றி பெற்று மருத்துவராக பணியாற்றி சேவை செய்ய வேண்டும் என்றார்.
மேலும் தான் பள்ளியில் படித்தபோது சக மாணவிகள் தன்னை திருநங்கை போலவே நினைக்காமல் தங்களில் ஒருவராக நினைத்ததாகவும் எங்கு போனாலும் தன்னையும் அழைத்துச் சென்றதாகவும் கூறினார் மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் தனக்கு உதவியதன் பேரிலேயே தான் வெற்றி பெற முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications