நெருங்கும் தேர்தல்.. தொடர்ந்து 24 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை!
சென்னை: இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 24 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் விற்கப்படுகிறது. பல்வேறு மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்று விதி கொண்டு வந்த பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. மக்கள் கடுமையாக அவதிப்படும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர தொடங்கியது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சமயங்களில் குறைந்த போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து 24 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்படி பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை
சென்னையில் பெட்ரோல் விலை 93.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 97.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 87.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 94.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications