திருப்பரங்குன்றம் உட்பட 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்.18ல் இடைத் தேர்தல் இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video

சென்னை: தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்படாத திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம் தேதி இடைத் தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டசபைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

ஆனால், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம்காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படவில்லை.
ஆனால், 3 தொகுதிகளுக்குமான தேர்தல்களை ஒத்திவைப்பதன் நோக்கம், அதிமுக அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில், ஆபத்து வந்துவிட கூடாது என்பதற்காகத்தான் என்று, திமுக குற்றம்சாட்டி வருகிறது.
இதனிடையே, மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால் தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை என்று, கூறி, அந்த தொகுதிகளுக்கும், பொதுத் தேர்தல் நடைபெறும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 3 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடத்த முடியுமா என்று, தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டது. குறுகிய காலமே இருப்பதால், அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, ஏப்ரல் 18ம் தேதிக்குப் பிறகு, தேர்தல் ரிசல்ட் வருவதற்கு முன்னால், வேறு ஒரு தேதியில் கூட இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தலாமே என திமுக தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், காலம் வரும்போதுதான் தேர்தலை நடத்த முடியும் என்று கூறிய தேர்தல் ஆணையம், உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தால் விரைந்து தேர்தலை நடத்த முடியாது என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு, 3 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது.












Click it and Unblock the Notifications