"விஜய் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை.. சினிமா டயலாக் பேசுறாரு”.. சீமான் காட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை; இருந்திருந்தால் வெளிப்பட்டிருக்கும். திரைப்பட வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார் விஜய். இது நல்ல அணுகுமுறை அல்ல" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

"விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்றால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லாதது எப்படி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

No Pain in Vijay s Words Only Cinema Dialogue Delivery Seeman

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்தச் சம்​பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்​வேறு தரப்​பில் இருந்தும் எதிர்ப்​பு​ வலுத்தது. இந்​நிலை​யில், தவெக தலை​வர் விஜய் 3 நாட்​களுக்​குப் பிறகு கரூர் சம்​பவம் தொடர்​பாக வீடியோ வெளி​யிட்​டார்.

அதில் பேசியுள்ள விஜய், "ஏறத்​தாழ 5 மாவட்​டங்​களுக்கு பிரச்​சா​ரத்​துக்கு சென்​றோம். அங்​கெல்​லாம் எது​வும் நடக்​க​வில்​லை. ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்​படி நடந்​தது? மக்​களுக்கு எல்லா உண்​மை​களும் தெரி​யும். எல்​லா​வற்​றை​யும் பார்த்​துக் கொண்​டிருக்​கிறார்​கள். கரூரைச் சேர்ந்த மக்​கள், அந்த உண்​மை​களை எல்​லாம் வெளியே சொல்​லும் போது, எனக்கு கடவுளே நேரில் வந்து இறங்கி அந்த உண்​மை​களை சொல்​வது​போலத் தோன்​றியது.

'சிஎம் சார்' உங்​களுக்கு பழி வாங்க வேண்​டும் என்ற எண்​ணம் ஏதாவது இருந்​தால், என்னை என்ன வேண்​டு​மா​னாலும் செய்​யுங்​கள். தொண்​டர்​கள் மீது கை வைக்​காதீர்​கள். நான் வீட்​டில் இருப்​பேன் அல்​லது அலு​வல​கத்​தில்​தான் இருப்​பேன். என்னை என்ன வேண்​டு​மா​னாலும் செய்​யுங்​கள். நண்​பர்​களே, தோழர்​களே, நமது அரசி​யல் பயணம், இன்​னும் வலிமை​யாக​வும்​, இன்​னும்​ தைரி​யத்​தோடும்​ தொடரும்" எனப் பேசினார்.

விஜய் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில், "விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை; இருந்திருந்தால் வெளிப்பட்டிருக்கும். திரைப்பட வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார் விஜய்." என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "விஜய் பேசியது திரைப்பட வசனம் போல இருக்கிறது. இது நல்ல அணுகுமுறை அல்ல. சிஎம் சார் எனச் சொல்வதே சின்னப்பிள்ளை பேசுவது போல இருக்கிறது. விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. இருந்திருந்தால் அவரது மொழியில் அது வெளிப்பட்டு இருக்கும். உருக்கமாக பேசி விஜய் வீடியோ வெளியிட்டிருக்க வேண்டும்.

இந்த நிகழ்வைப் பொறுத்தவரை விஜய் அந்த இடத்துக்கு பரப்புரைக்குச் சென்றதால் தான் நிகழ்ந்தது. அவர் போகவில்லை என்றால் இது நடந்திருக்காது. அப்படி என்றால் காரணம் யார்? மற்ற இடங்களில் எல்லாம் நடக்கவில்லை என்று சொல்கிறீர்கள் என்றால், அங்கும் நடந்திருக்க வேண்டும் என்கிறீர்களா? எல்லா கூட்டத்திலும் மயங்கி விழுந்தார்கள், இங்கு கூட்ட நெரிசல் அதிகம் என்பதால் மிதித்து பலர் பலியாகினர்.

கூட்டத்துக்குள் ஆள் புகுந்தார்கள், கத்தியால் குத்தினார்கள் என்கிறீர்கள். நான் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். ஒருவருக்கு கூட கத்தியால் குத்திய காயம் இல்லை. மிதித்ததில் தான் பலருக்கும் காயம். விஜய்யிடமே தண்ணீர் கேட்டார்கள். அவர் தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போடுகிறார். ஒருவரின் தேவைக்கு போடுகிறார், ஆனால் சுற்றி இருக்கும் அனைவருக்கும் தாகம் தானே?

திரைக்கவர்ச்சி நாட்டை ஆள முயற்சிக்கிறது. திரை மயக்கம், திரை போதையில் உள்ளனர். விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? சிஎம் சார் என விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனம். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று எந்தக் கட்சியும் தெரிவிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+