எம்ஜிஆர் -கருணாநிதி -ஜெயலலிதா நினைவிடங்களை பார்க்க 2 நாட்களுக்கு அனுமதியில்லை! என்ன காரணம் தெரியுமா?
சென்னை மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை காண 2 நாட்களுக்கு அனுமதியில்லை
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா - எம்.ஜி.ஆர். -கருணாநிதி -ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களை காண பார்வையாளர்களுக்கு இன்றும் நாளையும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
''குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும்.
தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.
எனவே, பாதுகாப்பு காரணங்களால் 25.01.2023 முதல் 26.01.2023 முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் நாளை ஜனவரி 26 குடியரசு தின பொதுவிடுமுறையை ஒட்டி, வழக்கத்தை விட கூடுதல் எண்ணிக்கையில் தலைவர்களின் நினைவிடங்களை காண்பதற்காக மக்கள் குடும்பத்துடன் வருவார்கள் என்பது தான்.
இதனிடையே அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை முன் கூட்டியே அறிந்தார்களானால் தேவையற்ற அலைச்சல்களை தவிர்க்க முடியும்.












Click it and Unblock the Notifications