ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை!
சென்னை: பாஜக தங்களுக்கு ஒரு சீட் வழங்கும் என்றும், அதில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறிவந்த நிலையில் பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் புதிய நீதிக் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தார். அதிமுக, பாஜக சார்பில் தலா ஒரு தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், இரட்டை இலை மற்றும் தாமரை சின்னங்களில் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

புதிய நீதிக்கட்சிக்கு அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி-யை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்தார். சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தமிழக பாஜக துணை தலைவராக இருக்கும் நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி முதல்முறையாக இவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சார்பில் எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தது பாஜக தலைமை.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியிலும், அவிநாசி தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பாஜக தங்களுக்கு ஒரு சீட் வழங்கும் என்றும், அதில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறிவந்த நிலையில் பாஜக இன்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் புதிய நீதிக் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.
கே.சி. திருமாறனின் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு சீட் வழங்கியது பாஜக. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் கே.சி. திருமாறன் போட்டியிடுவார் என பாஜக இன்று அறிவித்துள்ளது. ஆனால், புதிய நீதிக்கட்சிக்கு சீட் வழங்கப்படவில்லை.
புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில், பாஜக நிர்வாகி குஷ்புவின் கணவர் சுந்தர்.சி போட்டியிடும் நிலையில், தற்போது புதிய நீதிக் கட்சிக்கு பாஜக சீட் ஒதுக்காதது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்












Click it and Unblock the Notifications