ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தங்களுக்கு ஒரு சீட் வழங்கும் என்றும், அதில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறிவந்த நிலையில் பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் புதிய நீதிக் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தார். அதிமுக, பாஜக சார்பில் தலா ஒரு தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், இரட்டை இலை மற்றும் தாமரை சின்னங்களில் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

No Seat for Puthiya Needhi Katchi in BJP List Contrary to AC Shanmugam s Assertion

புதிய நீதிக்கட்சிக்கு அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி-யை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்தார். சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தமிழக பாஜக துணை தலைவராக இருக்கும் நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி முதல்முறையாக இவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சார்பில் எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தது பாஜக தலைமை.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியிலும், அவிநாசி தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாஜக தங்களுக்கு ஒரு சீட் வழங்கும் என்றும், அதில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறிவந்த நிலையில் பாஜக இன்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் புதிய நீதிக் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.

கே.சி. திருமாறனின் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு சீட் வழங்கியது பாஜக. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் கே.சி. திருமாறன் போட்டியிடுவார் என பாஜக இன்று அறிவித்துள்ளது. ஆனால், புதிய நீதிக்கட்சிக்கு சீட் வழங்கப்படவில்லை.

புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில், பாஜக நிர்வாகி குஷ்புவின் கணவர் சுந்தர்.சி போட்டியிடும் நிலையில், தற்போது புதிய நீதிக் கட்சிக்கு பாஜக சீட் ஒதுக்காதது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+