Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹோட்டல்களுக்கு விதிக்கப்பட்ட அதிரடி கட்டுப்பாடு.. சாப்பிட போறீங்களா? முதலில் இதை படிங்க.. அரசு மாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உணவகங்களில் புகைக்கும் அறை ( Smoking Room ) அமைப்பதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடப்பட்டு உள்ளது.

பொதுவாக உணவகங்கள் சிலவற்றில் புகைக்கும் அறை என்று தனியாக இருக்கும். அதாவது புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புகைக்க வசதியாக இந்த அறை ஏற்படுத்தப்பட்டு இருக்கும். சிலரால் சாப்பிடும் போது புகைபிடிக்காமல் இருக்க முடியாது. புகைத்துக்கொண்டே சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் புகை பிடிக்கும் விரும்பும் நபர்கள் தனியாக புகைக்கலாம்.

No Smoking rooms are allowed in Tamil Nadu restaurants anymore: Government orders

அதேபோல் புகைபிடிக்க விரும்பாத நபர்களுக்கும் இதனால் தொல்லை இருக்காது . தனியாக புகைக்க விரும்பும் நபர்கள் அறையில் இருப்பார்கள். மற்ற பொதுமக்கள் பொது அறையில் இருப்பார்கள். புகை, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆனால் இது புகைபிடிப்பதை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கை ஆகும். அதேபோல் மக்கள் தேவையின்றி இதனால் உடல்நலக்கேட்டிற்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. இப்போதெல்லாம் பல உணவகங்களில் இது போல புகைக்கும் அறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

அதிக அளவில் கஸ்டமர்கள் வர வேண்டும் என்பதற்காக இது போல புகைக்கும் அறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளன. இந்த நிலையில்தான் உணவகங்களில் புகைக்கும் அறை ( Smoking Room ) அமைப்பதற்கு தடை வி தித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடப்பட்டு உள்ளது.

அதன்படி உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில், தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

விதிகளை மீறி புகைக்குழல் கூடம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை, ₹20,000 முதல் ₹50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசாணை விவரம்: 44 புகைக்குழல் கூடத்தினை தடைசெய்தல்.- இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எவ்வாறிருப்பினும், நபரெவரும், அவருக்குச் சொந்தமாகவோ அல்லது பிற நபர் எவரின் சார்பாகவோ, உணவுக் கூடம் உள்ளடங்கலான எந்த இடத்திலும், புகைக்குழல் கூடம் எதனையும் திறக்கவோ அல்வது நடத்தவோ அல்லது பயாடிக்கையாளர்களுக்கு புகைக்குழலினை வழங்கவோ கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

No Smoking rooms are allowed in Tamil Nadu restaurants anymore: Government orders

விளக்கம்: "உணவுக்கூடம்" என்பது உணவு அல்லது சாராயம், மது, கோதுமைச்
சாராயம், பார்வி சாராயம் அல்லது பிற தானியவகையிலான மதுபானங்களை உள்ளடக்காதச் சிற்றுண்டி வகை எதனையும், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றதும் நுகர்வுக்காக விற்கப்படுகின்றதுமான இடம் எதுவும் என்று பொருள்படும் என்று விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது.

கைப்பற்றுதலுக்கான அதிகாரம்: மாநில அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட, உதவி ஆய்வாளர் படிநிலைக்குக் குறையாத, காவல்துறை அலுவலர் எவரும், 4A ஆம் பிரிவின் அந்த வகைமுறைகளானவை மீறப்படுகிறது அல்லது மீறப்பட்டுள்ளது என நம்புவதற்கான காரணத்தைக் கொண்டிருந்தால், புகைக்குழல் கூடத்தின் உட்பொருளாகவோ அல்லது துணைப் பொருளாகவோ பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் அல்லது பொருள் எதனையும் அவர் கைப்பற்றலாம், என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+