ஹோட்டல்களுக்கு விதிக்கப்பட்ட அதிரடி கட்டுப்பாடு.. சாப்பிட போறீங்களா? முதலில் இதை படிங்க.. அரசு மாஸ்!
சென்னை: உணவகங்களில் புகைக்கும் அறை ( Smoking Room ) அமைப்பதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடப்பட்டு உள்ளது.
பொதுவாக உணவகங்கள் சிலவற்றில் புகைக்கும் அறை என்று தனியாக இருக்கும். அதாவது புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புகைக்க வசதியாக இந்த அறை ஏற்படுத்தப்பட்டு இருக்கும். சிலரால் சாப்பிடும் போது புகைபிடிக்காமல் இருக்க முடியாது. புகைத்துக்கொண்டே சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் புகை பிடிக்கும் விரும்பும் நபர்கள் தனியாக புகைக்கலாம்.

அதேபோல் புகைபிடிக்க விரும்பாத நபர்களுக்கும் இதனால் தொல்லை இருக்காது . தனியாக புகைக்க விரும்பும் நபர்கள் அறையில் இருப்பார்கள். மற்ற பொதுமக்கள் பொது அறையில் இருப்பார்கள். புகை, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆனால் இது புகைபிடிப்பதை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கை ஆகும். அதேபோல் மக்கள் தேவையின்றி இதனால் உடல்நலக்கேட்டிற்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. இப்போதெல்லாம் பல உணவகங்களில் இது போல புகைக்கும் அறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
அதிக அளவில் கஸ்டமர்கள் வர வேண்டும் என்பதற்காக இது போல புகைக்கும் அறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளன. இந்த நிலையில்தான் உணவகங்களில் புகைக்கும் அறை ( Smoking Room ) அமைப்பதற்கு தடை வி தித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடப்பட்டு உள்ளது.
அதன்படி உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில், தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
விதிகளை மீறி புகைக்குழல் கூடம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை, ₹20,000 முதல் ₹50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசாணை விவரம்: 44 புகைக்குழல் கூடத்தினை தடைசெய்தல்.- இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எவ்வாறிருப்பினும், நபரெவரும், அவருக்குச் சொந்தமாகவோ அல்லது பிற நபர் எவரின் சார்பாகவோ, உணவுக் கூடம் உள்ளடங்கலான எந்த இடத்திலும், புகைக்குழல் கூடம் எதனையும் திறக்கவோ அல்வது நடத்தவோ அல்லது பயாடிக்கையாளர்களுக்கு புகைக்குழலினை வழங்கவோ கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விளக்கம்: "உணவுக்கூடம்" என்பது உணவு அல்லது சாராயம், மது, கோதுமைச்
சாராயம், பார்வி சாராயம் அல்லது பிற தானியவகையிலான மதுபானங்களை உள்ளடக்காதச் சிற்றுண்டி வகை எதனையும், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றதும் நுகர்வுக்காக விற்கப்படுகின்றதுமான இடம் எதுவும் என்று பொருள்படும் என்று விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது.
கைப்பற்றுதலுக்கான அதிகாரம்: மாநில அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட, உதவி ஆய்வாளர் படிநிலைக்குக் குறையாத, காவல்துறை அலுவலர் எவரும், 4A ஆம் பிரிவின் அந்த வகைமுறைகளானவை மீறப்படுகிறது அல்லது மீறப்பட்டுள்ளது என நம்புவதற்கான காரணத்தைக் கொண்டிருந்தால், புகைக்குழல் கூடத்தின் உட்பொருளாகவோ அல்லது துணைப் பொருளாகவோ பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் அல்லது பொருள் எதனையும் அவர் கைப்பற்றலாம், என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.,
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications