புதிதாக நியமிக்கப்படும் போது.. ஆசிரியர்களுக்கு 5 வருடங்கள் பணி இடமாற்றம் கிடையாது! பள்ளி கல்வித்துறை
சென்னை: அதிக காலிப்பணியிடங்கள் உள்ள முன்னுரிமை மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 5 வருடங்கள் பணிபுரிய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் இடங்களில் புதிய ஆசிரியர் நியமிக்கப்படும் போது இரண்டு ஆண்டுகள் அந்த பள்ளிகளில் பணியாற்ற வேண்டும். அவர்கள் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு வேறு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

இதன் அடிப்படையில் அவர்களுக்கு பணியிட மாற்றத்திற்கான சீனியாரிட்டி பட்டியல்கள் வெளியிடப்பட்டு பணியிட மாற்ற கலந்தாய்வில் பங்கேற்று தேவையான இடங்களை தேர்வு செய்ய முடியும். இந்த நடைமுறைதான் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் நியமனத்தின் போது புதிய நடைமுறையை கடைபிடிக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு மூலம் 2000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில், போட்டித்தேர்வு வரும் ஜனவரி 7-ந் தேதி நடைபெற இருக்கிறது. போட்டித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப் பட்டு நியமிக்கப்படும் ஆசிரியர்களை பணியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் மேலும் சில உத்த ரவுகளை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஜெ.குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தெரிவித்துள்ளார்.
அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தேர்வாகும் தேர்வர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பணி நிரவல் நடைமுறை பின்பற்றப்பட்ட பிறகே ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்னுரிமை மாவட்டங்களில் தேர்வர்களை நியமனம் செய்யும் போதே குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்தந்த மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆனையில் குறிப்பிட்டு நியமனம் செய்ய வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications