வடகிழக்குப் பருவமழை : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை - மஞ்சள் அலர்ட்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் 5 நாட்களுக்கு தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகிழக்குப் பருவக்காற்று மீண்டும் வீசத்தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ள வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 28ஆம் தேதி முதல் தொடங்கி விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் மழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
வடகிழக்குப் பகுதியில் இருந்து பருவக்காற்று மீண்டும் வீசத் தொடங்கியுள்ளதால் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தீவிரமடையும். பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரியில் பல பகுதிகளில் மழை தீவிரமடையும் என்பதால் 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் அலர்ட் என்பதால் அச்சப்படத்தேவையில்லை பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமி திடீர் கைது