கண்கள் சிவந்த ஸ்டாலின்.. இதெல்லாம் டீசர்தான்! ஒரே நாளில் தூக்கி அடிச்சிட்டாரே.. என்ன நடக்குதுங்க?
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி அதிகார ரீதியாக முதல்வர் ஸ்டாலின் பல முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளார் என்கிறார்கள். முக்கியமாக ஆளும் தரப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான டீசர்தான் நேற்று நடந்த சம்பவம் என்கிறார்கள்.
சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்று வந்த சுப்ரியா சாஹு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், பல உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று மாநில அரசால் இடமாற்றம் செய்யப்பட்டனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் தலைவராக இருந்த மற்றொரு பிரபல மூத்த அதிகாரி ககன்தீப் சிங், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறையை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதீப் யாதவ் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களில் இருந்து உயர்கல்விக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் மாற்றம்: பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் பதவிகளை உருவாக்க அரசு அனுமதி அளித்துள்ளது. . எனவே, இதுவரை கால்நடை பராமரிப்பு, பால்பண்ணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் ஆகியவற்றைக் கவனித்து வந்த சந்திர மோகனுக்கு பதில் மங்கத் ராம் சர்மா இதை கவனிப்பார்.
சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறக்கட்டளை துறையை பி.சந்திரமோகன் கவனிப்பார். பொதுப்பணித் துறையை கவனிப்பார்.
மணிவாசன் நீர்வளப் பொறுப்பாளராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலாளராக இருந்த பி செந்தில் குமார் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மாற்றியமைக்கப்பட்ட துறைகளின் பிற அதிகாரிகள்: ஆர்.செல்வராஜ் (தமிழ்நாடு சாலைத் துறை திட்டத்தில் இருந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களுக்கு), ஏ ஜான் லூயிஸ் (அரசு கேபிள் டிவி முதல் சமூக பாதுகாப்புத் திட்டம் வரை) மற்றும் எம்.விஜயலட்சுமி (வீடு மற்றும் நகர்ப்புறத்திலிருந்து) இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் வளர்ச்சி) ஆவர்.
நிலச் சீர்திருத்த ஆணையர் என்.வெங்கடாசலம் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுத் துறைக்கும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்திலிருந்து டி.என்.ஹரிஹரன் நிலச் சீர்திருத்தத் துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். லில்லி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சிறப்பு செயலாளராக போக்குவரத்து துறைக்கும், சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை, நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளராகவும், எம்.சாய்கிரண், செய்தித்தாள் மற்றும் காகிதங்களில் இருந்து, டி.ஐ.ஐ.சி.,க்கு மாற்றப்பட்டுள்ளனர். அரசு கேபிள்ஸ் நிறுவனத்தின் முழுப் பொறுப்பும் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஆர் வைத்திலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாற்ற போகும் ஸ்டாலின்: தமிழ்நாட்டில் ஆட்சி அதிகார ரீதியாக முதல்வர் ஸ்டாலின் பல முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளார் என்கிறார்கள். முக்கியமாக ஆளும் தரப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான டீசர்தான் நேற்று நடந்த சம்பவம் என்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி விவகாரம் கையை மீறி போன நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளாராம். முதல்வர் ஸ்டாலின் இன்னும் 3 வாரங்களில் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். அந்த பயணம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் கையை மீறி போனதால் விரைவில் தமிழ்நாடு அரசியலில் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்கிறார்கள்.
மாற்றம் 1: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதேபோல் அமைச்சரவையிலும் பெரிய மாற்றம் வரப்போவதாக செய்திகள் வருகின்றன. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''நான் எப்படி அதைச் சொல்ல முடியும் ? முதல்வர்தான் முடிவு எடுப்பார் '' என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இதே போன்ற கேள்வி இதற்கு முன்பும் பல முறை அவரிடம் கேட்கப் பட்டிருக்கிறது.
அப்போதெல்லாம், எனக்கே தெரியாத விசயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. இதையெல்லாம் உங்களுக்கு யார் சொல்கிறார்கள்.. எனக்கு அப்படி எதுவும் தகவல் வரவில்லையே.. உங்களுக்கு எப்படி இது போன்ற தகவல்கள் வருகின்றன.. எனக்கு அப்படி தெரியவில்லையே ? '' என்கிற ரீதியில் மறுத்தே வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
துணை முதல்வர் : ஆனால், இந்த முறை அப்படி எதுவும் மறுக்காமல், அதை எல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று சொல்லி உள்ளார். அதாவது துணை முதல்வர் பற்றி முதல்வர் முடிவு எடுக்கட்டும் என்று உதயநிதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லியிருப்பதன் மூலம், துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். அதனை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இளைஞரணி மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
முக்கியமாக பிறந்தநாள் விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் கொடுத்த முக்கியத்துவம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. கடந்த பிறந்த நாளை விட இந்த பிறந்த நாளில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பின்பும் உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் பதவி திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மாற்றம் 2- அமைச்சரவை மாற்றம்: சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனியர்களாக இருக்கும் 10 அமைச்சர்களைத்தான் டெல்லி டார்கெட் செய்கிறது. அப்படித்தான் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தனர். தற்போது ஏவ வேலுவை டார்கெட் செய்கின்றனர். இடையில் பொன்முடியை டார்கெட் செய்தனர். இப்படி சீனியர்களாக இருக்கும் 10 பேரைத்தான் டார்கெட் செய்து வருகின்றனர்.
சீனியர்களாக இருக்கும் நபர்கள்தான் டெல்லியின் பொறியில் சிக்கி உள்ளனர். இதில் சிலர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications