நிம்மதி இல்லை என புலம்பிய ரஜினி! "சிந்தனை தவறாக இருந்தால் நிம்மதி எப்படி வரும்!" சீமான் தாக்கு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் சீமான் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்தது.
ஏற்கனவே விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி
பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி தொகையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. இதனிடையே அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை அம்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டம்
அதேபோல தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் சமீபத்தில் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் வலியுறுத்தல் காரணமாகவே கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அடித்தட்டு மக்களைப் பாதிக்காத வகையில் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருந்தார். இதைக் கண்டித்தும் நாம் தமிழர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சாடல்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி வரிகளை உயர்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. அரசின் வருவாயை உயர்த்தி மக்களுக்குத் தேவையான திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. மின் கட்டண உயர்வு விவகாரத்திலும் கூட திமுகவும் பாஜகவும் தொடர்ந்து ஒருவரையொருவர் குற்றம்சாட்டி நாடகம் ஆடியே வருகின்றன" என்றார்.
Recommended Video

ரஜினி
சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், சாதியையும், அறிவையும் இணைத்துப் பேசியது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சீமான், "இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அதே நிகழ்ச்சியில் பணம், புகழ், பெயர் இருந்தும் தனக்கு 10 சதவீதம்கூட நிம்மதி இல்லை என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார். சிந்தனை இந்தளவுக்குத் தவறாக இருந்தால் மன நிம்மதி எப்படிக் கிடைக்கும்" என்று கடுமையான கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications