Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முக்குலத்து மக்களின் 7ஆம் படை வீடு பசும்பொன்! எடப்பாடியை எட்டப்பனுடன் ஒப்பிட்டு மருது அழகுராஜ் சாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் செல்லவுள்ள நிலையில் அவரது பயணத்தை கடுமையாக சாடியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ்.

''காந்தியின் கல்லறைக்கு கோட்சே வருவதும், கட்டப்பொம்முவின் கயத்தாறுக்கு எட்டப்பன் வருவதும், தியாகமே வடிவான பசும்பொன் சித்தர் நினைவிடத்துக்கு துரோகமே தொழிலான எடப்பாடி வருவதும் ஒன்று தான்'' என்று மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

O.Panneerselvam supporter Maruthu Azhaguraj has criticized Edappadi palanisamy Pasumpon trip

ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் வெகு விமரிசையாக நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ், மதிமுக உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள்.

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வரும் 30ஆம் தேதி பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் தரப்பு எடப்பாடி பழனிசாமியின் பசும்பொன் விசிட்டை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் விடுத்துள்ள முகநூல் பதிவு வருமாறு;

''முக்குலத்து மக்களின் ஏழாம் படை வீட்டுக்கு எடப்பாடி வருகிறாராமே.. நல்லா வரட்டும்.. காந்தியின் கல்லறைக்கு கோட்சே வருவதும் கட்டப்பொம்முவின் கயத்தாறுக்கு எட்டப்பன் வருவதும் தியாகமே வடிவான பசும்பொன் சித்தர் நினைவிடத்துக்கு துரோகமே தொழிலான எடப்பாடி வருவதும் ஒன்று தான்.''

''ஆனாலும் எடப்பாடி முகத்தை ஏறெடுத்தும் பார்க்காம திரும்பிபடுத்துக் கொள்ளும் தேவரய்யா ஆன்மா.. அப்புறம் அந்த ஆளு வந்து போனதும் டெட்டாயில், பினாயில், லைசால், ஹார்பிக், பிளீச்சிங் பவுடர் எல்லாத்தையும் சேர்த்து கலக்கி அந்த தெய்வீகத் திருவிடத்தை கழுவி விட்டு தீட்டுக் கழிச்சு புனிதப்படுத்துங்க. அது ரொம்ப முக்கியம்.. என்ன நாஞ் சொல்றது..'' இவ்வாறு எடப்பாடி பழனிசாமி மீதான தனது கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளார் மருது அழகுராஜ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+