ஓபிஎஸ் சொன்ன வார்த்தை.. இணை ஒருங்கிணைப்பாளர் பெயர்.. துரோகி..துரோகி என கோஷமிட்ட நிர்வாகிகள்!
எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லாமல் இணை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டும் ஓ பன்னீர் செல்வம் கூறியபோது அவரது ஆதரவாளர்கள் அரங்கம் அதிர துரோகி துரோகி என கோஷம் எழுப்பினர்.
சென்னை: சென்னை எழும்பூரில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணியினரின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லாமல் இணை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டும் ஓபிஎஸ் கூறினார். உடனே அவரது ஆதரவாளர்கள் அரங்கம் அதிர துரோகி துரோகி என கோஷம் எழுப்பினர்.
சென்னை எழும்பூரில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணியினரின் மாவட்ட செயலாளர்கள் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவின் சட்ட விதிகளை எந்த அளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்து தான் கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் நாங்கள் ஒருங்கிணைந்து 23 தீர்மானங்களை வடிவமைத்து, அதை நிறைவேற்றும் பொதுக்குழுவாக அந்த பொதுக்குழு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.

23 தீர்மானங்களும் ரத்து..
அந்த பொதுக்குழுவை தற்காலிகமாக தலைமை தாங்குகின்ற தமிழ்மகன் உசேனை நான் முன்மொழிய, இணை ஒருங்கிணைப்பாளர் வழிமொழிய அந்த கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, சர்வாதிகார உச்சநிலைக்கு சென்று எவ்வித முன் அறிவிப்பும் இன்றி 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள். பொருளாளர் என்ற முறையில் வரவு செலவு கணக்குகளை நான் சமர்பிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் பல்வேறு அராஜகங்கள் நடைபெற்றது.

அன்றைக்கே இழந்துவிட்டார்
இதை நாட்டு மக்களும் டிவி மூலமாக பார்த்தனர்.. அந்த அளவிற்கு அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். நான் அவரது பெயரை உச்சரிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அந்த தகுதியை அவர் அன்றைக்கே இழந்துவிட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கடைபிடித்த அதிமுக சட்ட விதியை காப்பாற்ற வேண்டும் என்றே இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கியிருக்கிறது. உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்புக்கு எதிராகத்தான் உச்ச நீதிமன்றம் சென்று இருக்கிறோம்.

துரோகி துரோகி என கூச்சல்
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர்... என்று பெயரை சொல்லாமல் ஒபிஎஸ் தவிர்த்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் துரோகி துரோகி என கூச்சலிட்டனர்.முன்னதாக ஓ பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் மாதம் நடத்துவது என
அதில், அ.தி.மு.க. என்னும் தொண்டர்கள் இயக்கத்தை, மக்கள் இயக்கத்தை, சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது. அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் எனத் தீர்மானிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் அ.தி.மு.க.வின் பொன் விழா என முப்பெரும் விழாவினை 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications