தமிழகத்தில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் அதிகரிப்பா?முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் அரசும், மக்களும் நிம்மதியாக இருந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது 1700-ஐ கடந்து விட்டது. ஓமிக்ரான் வைரசும் 120-ஐ கடந்து விட்டது. சென்னையில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது.

கொரோனா அதிவேகம்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10,634 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, கோவை., திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

பல்வேறு கட்டுப்பாடுகள்
நிலைமை இப்படி இருக்க ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார் இத்துடன் சேர்த்து பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும், வருகிற 10-ம் தேதி வரை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

பள்ளிகள்
மேலும், மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில்களில் 50% பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி, ஜிம்கள், ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவற்றில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Recommended Video

முதல்வர் இன்று ஆலோசனை
இந்த நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிவேமாக உயரும் நிலையில் ஒமைக்ரான் தடுப்பு பணிகள் குறித்து உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தின் முக்கிய பண்டிகையான பொங்கல் நெருங்கி வரும் நிலையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மருத்துவ துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த கூட்டத்துக்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications