ஒன்இந்தியா தமிழில் "கருத்து சொல்வது" இனி ரொம்ப ஈஸி!
சென்னை: "ஒன்இந்தியா தமிழ்" இணையதளத்தில் வாசகர்கள் கமெண்ட் செய்வது இனி மிகவும் எளிதாகி உள்ளது. வாசகர்கள் தங்கள் எண்ணங்களை கமெண்ட்டில் எழுத வார்த்தைகள் கூட தேவையில்லை. வெறும் எமோஜிக்களை மட்டும் பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வசதியையும் சேர்த்துள்ளோம்.
ஒன்இந்தியா செய்திகளை படிப்பவர்களுக்கு கமெண்ட் பாக்ஸ் எங்கே இருக்குமோ என்ற குழப்பம் இனி வேண்டாம். ஒவ்வொரு செய்தியின் தலைப்புக்கு கீழேயும் மற்றும், செய்தி முடிவிலேயும் கமெண்ட் பாக்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளதால், வாசகர்கள் எளிதாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். உங்கள் இ-மெயில் கணக்கை கொண்டு அக்கவுண்ட் ஓபன் செய்யலாம், அல்லது உங்கள் பெயரை மட்டுமே பதிவு செய்து கெஸ்ட் என்ற முறையிலும் உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். "நீங்க உங்கள் கருத்தை பதிவு பண்ணா மட்டும்போதும்!"

வாசகர்களின் வசதியை கருத்தில் கொண்டு, காலத்திற்கு ஏற்ப பல புதுமைகளை ஒன்இந்தியா இணையதளம் தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில்தான், வாசகர்கள் தங்கள் கருத்துக்களை எந்தவித தடையும் இன்றி தாரை தப்பட்டை கிழிய அடித்து நொறுக்கும் வகையில் ஒன்இந்தியா தளம் இந்த புதிய மாற்றங்களை புகுத்தி உள்ளது.
உடனடியாக ஒன்இந்தியாவில் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். தினமும் லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் ஒன்இந்தியா தமிழ் இணையதளம் வாயிலாக உங்கள் கருத்து உலகமெங்கும் எதிரொலிக்கட்டும்!












Click it and Unblock the Notifications