சென்னையில் 600 பெரிய மரங்களை வெட்டுறோமா? இல்லவே இல்ல.. பதறி அடித்து விளக்கம் கொடுத்த தெற்கு ரயில்வே!
சென்னை : சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 600 மரங்கள் வெட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி கண்டனங்கள் எழுந்த நிலையில், தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னை, எழும்பூா் ரயில் நிலையத்தை ரூ.734.91 கோடியில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரயில் நிலையத்தையொட்டியுள்ள கட்டடங்கள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றப்படுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பழமைவாய்ந்த மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக அப்பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள ஏறக்குறைய 600 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் 50 முதல் 80 ஆண்டுகள் வயதுடையவை. பல மரங்கள் நூறு ஆண்டுகளை கடந்தவை.
பாதுகாக்கப்பட வேண்டிய மரங்களை வெட்டி வீழ்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல. நவீனமயமாக்கம் என்ற பெயரில் விலைமதிப்பற்ற மரங்களை வெட்டி வீழ்த்துவதை ஏற்க முடியாது. எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
வெட்டப்படும் மரங்களை ரயில்வே செலவில் அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் திடல்கள், பூங்காக்கள் ஆகியவற்றில் நட்டு பராமரிக்க வேண்டும். வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக 182 மரங்கள் மட்டுமே வெட்டப்படுகின்றன என்றும், வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக ஒவ்வொரு மரத்திற்கும் 10 மரக்கன்றுகள் நடப்படும் எனும் தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்படும். பாதிக்கப்படும் 318 மரங்களில் 103 மரங்கள் ரயில்வே வளாகத்தில் வேறு இடத்திற்கு இடம்மாற்றம் செய்யப்படும். 33 மரங்களின் கிளைகளை சீர்செய்து அதே இடத்தில் தக்கவைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications