ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.. நயினாருக்கு சப்போர்ட்டாக வந்த தமிழிசை
சென்னை: ஓ பன்னீர்செல்வம் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்றும், தலைவர்கள் பொய் சொல்ல வாய்ப்பு இல்லை. நயினார் நாகேந்திரன் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் கூறியதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை, அதே நேரத்தில் எங்கள் தலைவரை ஒருவர் குறை கூறுவதை எங்களால் ஏற்க முடியாது என்றும் தமிழிசை கூறினார்.
அதிமுகவில் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை ஆரம்பித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இதையடுத்து பாஜகவும் ஓ பன்னீர்செல்வத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

பாஜக கூட்டணியில் இருந்து விலகல்
ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் மோடி மற்றும் அமித்ஷா ஓ பன்னீர் செல்வத்தை சந்திக்க அனுமதி கொடுத்ததில்லை. கடந்த மாதம் தூத்துக்குடி மற்றும் சோழபுரம் வருகை தந்த பிரதமர் மோடி ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. ஓ பன்னீர்செல்வம் மோடிக்கு கடிதம் அனுப்பியும் அவர் நேரம் ஒதுக்காததால் கடும் அதிருப்தியில் இருந்தார்.
இதையடுத்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த ஓ பன்னீர்செல்வம் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட வாரியாக மக்களை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு இப்படி நடந்துள்ளதால் அவரை விமர்சித்து ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.
தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
இதற்கு தமிழக மூத்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நயினார் நாகேந்திரனை ஓ பன்னீர்செல்வம் குறை சொல்வதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். பாஜக என்ற கட்சியில் இருக்கிறோம். அதன்படி எங்கள் தலைவரை ஒருவர் குறை கூறுவதை எங்களால் ஏக முடியாது. ஓ பன்னீர்செல்வம் இன்னும் நிதானமாக முடிவு எடுத்து இருக்க வேண்டும்.
இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை ஓ பன்னீர்செல்வம் செய்திருக்க வேண்டும். ஓபிஎஸ் நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் கூறியதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. அதே நேரம் தலைவர்கள் பொய் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழிசை கூறினார்.
நயினார் நாகேந்திரன் கருத்து
முன்னதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஓ பன்னீர்செல்வம் பற்றி குறை கூற மாட்டேன் என்று கூறினார். அவர் கூறுகையில், "ஓ பன்னீர்செல்வம் என்னை பற்றி குறை கூறினாலும், நான் அவரைப் பற்றி குறை கூற மாட்டேன்.. முதல்வரை சந்திப்பதற்கு முந்தைய நாள் கூட நான் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டேன்.. ஓ பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதம் எனக்கு இன்னு கிடைக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
-
ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications