ப சிதம்பரம் வீட்டில் நடந்த திருட்டு.. புகாரில் சிக்கிய பெண் தூக்குப் போட்டு தற்கொலை
சென்னை: கடந்த ஆண்டு ப.சிதம்பரம் வீட்டில் நடந்த நகை மற்றும் பணம் திருட்டு தொடர்பாக பார்வதி என்ற பெண்ணை அண்மையில் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் அந்த பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பார்வதி (46), இவரது கணவர் சந்திரசேகர். இதில் சந்திரசேகர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்களுக்கு சுபாஷ், காமராஜ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பார்வதி தணிகாச்சலம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் வீட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1.5லட்சம் பணமும், 1லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையும் மாயமானது. இது தொடர்பாக சிதம்பரம் வீட்டில் வேலை செய்த விஜயா மற்றும் வெண்ணிலா ஆகிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் விஜயாவின் உறவினர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரில், பார்வதியிடம் சில நகைகளை பாதுகாப்பாக வைக்கும் படி தாங்கள் கொடுத்தாக தெரிவித்து இருந்தனர். இதையடுத்து போலீசார் பார்வதி மற்றும் கவிதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது விஜயாவிடம் வாங்கிய நகைகள் தொடர்பாக போலீசார் பார்வதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் பார்வதி சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பார்வதி பாண்டிபஜாரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மன அழுத்தம் காரணமாக பார்வதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications